தடுப்பு காவல் உத்தரவின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள பாதாள
உலகக்குழுத் தலைவர் மாக்கந்துரே மதூஸை பிணையில் விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரது கொலை முயற்சிக்கான சூழ்ச்சி தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்ற போது இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
டுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துரே மதூஸ் அங்கிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில், கடந்த மே மாதம் 5ம் திகதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கு அமைய குற்றப் புலனாய்வு பிரிவினரால் 90 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவர் 90 நாட்களுக்கு மேல் தடுப்பில் உள்ள நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட வேண்டும் என்று அவரது சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
மாக்கந்துரே மதுஷ் 90 நாட்களுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டு . அவரை பிணையில் வெளியில் விட வேண்டும்.
Reviewed by Madawala News
on
August 09, 2019
Rating: