மக்கள் விடுதலை முன்னணியினர் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை அரசின் திட்டமே...
(இராஜதுரை ஹஷான்)
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தால் இதுவரையில் தீர்வு பெற்றுக் கொடுக்கவில்லை
என்று குறிப்பிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியைப் பாதுகாத்து தமிழ் மக்களுக்கு துரோகமிழைக்கின்றது.
எதிர்த் தரப்பினராக இருந்து கொண்டு கூட்டமைப்பினரும், மக்கள் விடுதலை முன்னணியினரும் அரசாங்கத்தின் பங்காளியாக செயற்படுவதை விட அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்வதே பொருத்தமானதாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், மக்கள் விடுதலை முன்னணியினர் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்துள்ளமை ஆச்சரியப்படும் ஒரு விடயமல்ல.
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து அடிப்படைவாத குற்றச்சாட்டுகளை முன்னிலைப்படுத்தி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக எதிரணியினர் பாராளுமன்றததில் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்து அது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் திகதி யும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொண்டி ருந்தால் நிச்சயம் பிரேரணை வெற்றி பெறும் என்பதை அரசாங்கம் நன்கு அறிந்திருந்தது. அரசாங்கத்தைப் பாது காக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்கள் விடுதலை முண்ணயின் ஊடாக அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு அரசியல் திட்டங்களை முறையாக வகுத்தார்.
மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத் திற்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடையும் என்று நன்கு அறிந்தும் எதிர்க்கட்சியினர் என்ற ரீதியில் அரசாங்கத்துக்கு எதிரான ஒரு பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்து எதிர்க்கட்சியின் கடமையை முழுமைப் படுத்தியுள்ளோம்.
எதிர்க் கட்சித் தலைவராலே நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தது என்று எவராலும் குறிப்பிட முடியாது. பிரேரணையை வெற்றி கொள்வதற்கான எவ்வித முயற்சிகளையும் மக்கள் விடுதலை முன்னணியினர் மேற்கொள்ளவில்லை. இவர்களின் நோக்கம் அரசாங்கத்தைப் பாதுகாப்பதிலேயே முழுமையாகத் தங்கியிருந்தது.
தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினை களுக்கு அரசாங்கம் இதுவரையில் எவ்வித தீர்வையும் பெற்றுக் கொடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டும் கூட்டமைப்பினர் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாப்பதால் எவ்வித பயனும் ஏற்படாது. வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் கூட்டமைப்பினரிடம் கிடையாது. எதிர்க்கட்சியினர் என்று குறிப்பிட்டுக் கொண்டு கடந்த நான்கு வருட காலமாக அரசாங்கத்தின் அனைத்து வரப்பிரசாதங்களையும் இவர்கள் பெற்று தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்துள்ளார்கள்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு கூட்டமைப்பினரும், மக்கள் விடுதலை முன்னணியினரும் தொடர்ந்து ஆதரவு வழங்குவது அவர்க ளின் தனிப்பட்ட தீர்மானமாகும். எதிர்க்கட்சியினர் என்று குறிப்பிட்டுக் கொள்வதால் பதவி நிலையின் பொறுப்புகள் அவமதிக் கப்படுகின்றன.
ஆகவே இவ்விரு தரப்பினரும் குறுகிய காலத்துக்கு அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டு முழுமை யாக அரசாங்கத்துக்கு சார்பாகவே செயற் படலாம். அதுவே சிறப்பாக அமையும் என்றார்.
மக்கள் விடுதலை முன்னணியினர் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை அரசின் திட்டமே...
Reviewed by Madawala News
on
July 13, 2019
Rating: