1 மில்லியன் பயனாளர்களைக் கொண்ட தனது பேஸ்புக் வலைத்தளம் முடக்கப்பட்டமைக்கு எதிராக,
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று (9) முறைபாடு செய்துள்ளதாகத் தெரிவித்த, இலங்கையின் பிரபல பாடகர் ஹிராஜ் வீரரத்ன, ஊடக அமைச்சின் செயலாளர், தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவுக்கு எதிராகவே மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைபாடு செய்ததாகத் தெரிவித்தார்.
இன்று (10) கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற “ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு இதுவரை தெரியாமலிருக்கலாம். எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்ததுடன், எதிர்க்கட்சியினரும் இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தனது பேஸ்புக் Page முடக்கப்பட்டமைக்கு எதிராக பாடகர் இராஜ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.
Reviewed by Madawala News
on
July 10, 2019
Rating: