வீதியில் சென்ற பெண்களுக்கு ஆணுறுப்பைக் காட்டிய இளைஞர் கல்முனை பொலிஸிடம் ஒப்படைப்பு!


–பாருக் சிஹான் –
வீதியால் சென்ற இரு பெண்களுக்கு தனது ஆணுறுப்புப் பகுதியைக் 
காண்பித்தார் எனக் கூறப்படும் இளைஞர் நையப்புடைத்த பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் கல்முனையில் இடம்பெற்றுள்ளது.


நேற்று மாலை 5மணியளவில் பாண்டிருப்பு கல்முனை எல்லை வீதியில் இடம்பெற்ற சம்பவத்தில் கல்முனைப் பொலிஸ் பிரிவிலுள்ள சாய்ந்தமருதுவைச் சேர்ந்த இளைஞரே காயமடைந்த நிலையில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


குறித்த காயமடைந்த இளைஞர் சாய்ந்தமருதுவிலிருந்து மருதமுனை பகுதியை நோக்கி செல்வதற்காக பாண்டிருப்பு உள்ளக வீதி ஊடாக சென்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலஸஸார் வவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீதியில் சென்ற பெண்களுக்கு ஆணுறுப்பைக் காட்டிய இளைஞர் கல்முனை பொலிஸிடம் ஒப்படைப்பு! வீதியில் சென்ற பெண்களுக்கு ஆணுறுப்பைக் காட்டிய இளைஞர் கல்முனை பொலிஸிடம் ஒப்படைப்பு! Reviewed by Madawala News on July 07, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.