ரிசாட் எம்.பி இராஜினாமா செய்யும் போது மக்களிடம் கூறிய நியாயங்கள் அனைத்தும் தற்பொழுது நிறைவேறியுள்ளதா ?
குற்றச்சாட்டுக்களிலிருந்து தான் நிரபராதியானதன் பின்னரேயே மீண்டும் அமைச்சுப் பதவியை
ஏற்பதாக முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தனது இராஜினாமாவின் போது தெரிவித்திருந்ததாகவும், அவர் மீண்டும் அமைச்சுப் பதவியை ஏற்பதாயின் அவர் கூறிய பிரகாரம் நிரபராதியாக மாறியிருக்க வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னாசன உறுப்பினரான பந்துலால் பண்டாரிகொடகே தெரிவித்தார்.
ரிசாட் எம்.பி. தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யும் போது பல்வேறு நியாயங்களை மக்களிடம் கூறியிருந்தார். அவ்வாறு அவரினால் கூறிய அனைத்தும் தற்பொழுது நிறைவேறியுள்ளதா என்பதை மக்கள் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பதவி விலகிய முஸ்லிம் எம்.பி.க்கள் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்கப் போவதாக தெரிவிக்கப்படும் கருத்துக் குறித்து இவரிடம் வினவியதற்கே இவ்வாறு பதிலளித்துள்ளார்.
ரிசாட் எம்.பி இராஜினாமா செய்யும் போது மக்களிடம் கூறிய நியாயங்கள் அனைத்தும் தற்பொழுது நிறைவேறியுள்ளதா ?
Reviewed by Madawala News
on
July 13, 2019
Rating: