எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவை களமிறக்குவது தொடர்பில்
மஹிந்த ராஜபக்ஷவின் மனதில் விருப்பம் இல்லை என்றே தோன்றுவதாக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யாரை களமிறக்குவது என்பது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதுவரை அறிவிக்கவில்லை. கடந்த அரசு கவிழ கோத்தாபய ராஜபக்ஷவின் செயல்களே காரணம் என்பதை மஹிந்த ராஜபக்ஷ அறிந்து வைத்துள்ளார்.
மேலும் மஹிந்த ராஜபக்ஷ அறிவிக்கும் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக மொட்டு கட்சி கூறியுள்ளது.மஹிந்த ராஜபக்ஷ இது தொடர்பில் இன்னும் அறிவிக்கவில்லை. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவை களமிறக்குவது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவின் மனதில் விருப்பம் இல்லை என்றே தோன்றுகிறது என அவர் குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ஷவின் மனதில் கோத்தாபய ராஜபக்ஷ இல்லை !!
Reviewed by Madawala News
on
July 07, 2019
Rating: