தீ விபத்தினால் தொழிற்சாலைக்கு பாரிய சேதம்.. #மாதம்ப


மாதம்பே, சுதுவெல்ல பிரதேசத்தில் இயங்கிவந்த தும்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால்
தொழிற்சாலைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு 11.00 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.

தொழிற்சாலைக்கு அருகில் இருந்து அங்கு சேவையாற்றும் குடும்பம் ஒன்று விபத்தைக் கண்டு உரிமையாளர் மற்றும் பொலிஸாருக்கு அறிவத்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், தீயினால் தொழிற்சாலையில் இருந்த இயந்திரங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தீ விபத்தினால் தொழிற்சாலைக்கு பாரிய சேதம்.. #மாதம்ப  தீ விபத்தினால் தொழிற்சாலைக்கு பாரிய சேதம்.. #மாதம்ப Reviewed by Madawala News on July 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.