சுமார் 300 தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளது..



தன்னாட்சி, தட்சார்பு, தன்னிறைவு என்ற கோட்பாடுகளுக்கு ஏற்பவே தான் செயற்பட்டு வருவதாக
தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று -20- இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முஸ்லிம் மயமாக்கல் தொடர்பில் அத்துரலிய ரத்தன தேரர் தனக்கு கூறியவற்றை அவர் இவ்வாறு விபரித்தார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பலவிதமாக பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. 

சுமார் 300 தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன.  

கிழக்கு மாகாணத்தில் ஒன்பதினாயிரம் தமிழ் பெண்கள், இஸ்லாத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அத்துரலிய ரத்தின தேரர் என்னிடம் தெரிவித்தார். 

இந்த செயற்பாடு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 

எனவே எமது காணிகள், எமது பெண்கள், உரிமைகள் என்பன பறிபோகின்றன என தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
சுமார் 300 தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளது.. சுமார் 300 தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளது.. Reviewed by Madawala News on July 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.