மாணவர்கள் புத்தகப் பையின் சுமையில் இருந்து விடுபட, பாடப்புத்தகங்களை, மூன்று தவணைகளில் 3 என்ற அடிப்படையில் தனித்தனியாக அச்சிட முடிவு.



   பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின்  எடைகளைக்  குறைப்பதற்காக குறித்த
பாடப்புத்தகங்களை மூன்று  தவணைகளின் அடிப்படையில் வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சின்  கவனம் திரும்பியிருப்பதாக, கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் ஜயந்த விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.


   இதற்கு அமைவாக, 2021 ஆம் ஆண்டு தொடக்கம் தரம் 6 முதல் தரம் 11 வரையிலான மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கான  பாடப்புத்தகங்களை, மூன்று தவணைகளில் மூன்று என்ற அடிப்படையில் தனித்தனியாக  அச்சிடப்படவுள்ளது.


   இந்தப்  பாடப்புத்தகங்கள் மூன்றிலும்,  மூன்று தவணைகளுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளுக்குத் தேவையான அனைத்து விடயங்களும் மூன்று பிரிவுகளாக உள்வாங்கப்படவுள்ளது.


   இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதன் மூலம்,  மாணவர்களின் பாடப்புத்தக எடைகளின் சுமைகளை  பெருமளவு குறைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடப்புத்தகங்களை மூன்றாக அச்சிடுவதன் மூலம் பதிப்பகச் செலவு, போக்குவரத்துச் செலவு மற்றும் களஞ்சியப்படுத்துதல் போன்றவற்றைக் குறைக்க முடியும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )
மாணவர்கள் புத்தகப் பையின் சுமையில் இருந்து விடுபட, பாடப்புத்தகங்களை, மூன்று தவணைகளில் 3 என்ற அடிப்படையில் தனித்தனியாக அச்சிட முடிவு. மாணவர்கள் புத்தகப் பையின் சுமையில் இருந்து விடுபட,  பாடப்புத்தகங்களை, மூன்று தவணைகளில் 3 என்ற அடிப்படையில் தனித்தனியாக  அச்சிட முடிவு. Reviewed by Madawala News on July 17, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.