சிலாபம் பிரதேச கடற்கரையில் விளையாடிக்கொண்டு இருந்த தாய் மற்றும் 3 மகள்களை அலை இழுத்து சென்ற அனர்த்தம்.
இன்று காலை சிலாபம் பிரதேச கடற்கரையில் விளையாடிக்கொண்டு இருந்த கண்டிப்பிரதேச குடும்பம்
ஒன்றும் கடும் அனர்த்தம் ஒன்றுக்கு முகம் கொடுத்துள்ளது.
இன்று காலை 10:45 மணியளவில் பாரிய அலையொன்று தாய் மற்றும் மூன்று மகள்களை இழுத்து சென்றதில் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பின்னர் பிரதேச வாசிகள் அவர்களை வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற நிலையில் ஒரு மகள் உயிரிழந்துள்ளார், தாய் மற்றும் மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மத்திய மாகாணம் தந்துரை பிரதேசத்தை சேர்ந்த இவர்கள் 43 வயது தாய் மற்றும் 8, 12 வயது மகள் சிகிச்சை பெற்று வருவதுடன் , 1 வயது குழந்தையே உயிரிழந்துளது.
உயிரிழந்த குழந்தை ஒஷடி மெத்சிரினி என அறியப்படுகிறது.
சிலாபம் பிரதேச கடற்கரையில் விளையாடிக்கொண்டு இருந்த தாய் மற்றும் 3 மகள்களை அலை இழுத்து சென்ற அனர்த்தம்.
Reviewed by Madawala News
on
July 13, 2019
Rating: