VIDEO : தங்காலை - குருபொக்குண 20 மீன்பிடி படகுகள் தீக்கிரையாகின ... 500 இலட்சம் ரூபா வரை நட்டம் .


தங்காலை  -  ஹூங்கம – குருபொக்குண துறைமுகத்தில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலின் காரணமாக
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 படகுகள் தீக்கிரையாகியுள்ளன.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையென்றும், தங்காலை தீயணைப்புப் பிரிவினர் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

 நேற்று இரவு 10 மணிக்கும் 11 மணிக்கும் இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

படகுகள் எரிந்துள்ளமையால் சுமார் 500 இலட்சம் ரூபா வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


VIDEO : தங்காலை - குருபொக்குண 20 மீன்பிடி படகுகள் தீக்கிரையாகின ... 500 இலட்சம் ரூபா வரை நட்டம் . VIDEO : தங்காலை -  குருபொக்குண 20 மீன்பிடி  படகுகள் தீக்கிரையாகின ... 500 இலட்சம் ரூபா வரை நட்டம் . Reviewed by Madawala News on June 26, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.