பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் விஜயமொன்றிற்காக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில்
இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ள அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நாளை தஜிகிஸ்தான் நாட்டுகான விஜயமொன்றை மெற்கொள்ளவுள்ளார்.
பிரதமருடன் மேலும் இருவர் இந்த விஜயத்தில் கலந்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இன்று (12) பகல் 12.15 மணியளவில் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 308 என்ற விமானத்தில் அவர்கள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த குழுவினர் 14 ஆம் திகதி மீண்டும் இலங்கை திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, தஜிகிஸ்தான் நாட்டில் நடைபெறவுள்ள ஆசியாவின் நம்பகத் தன்மை மற்றும் ஒருங்கிணைவை கட்டியெழுப்புவதற்கான அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார்.
இந்த மாநாட்டில் ரஷ்ய மற்றும் சீன ஜனாதிபதி உள்ளிட்டவர்களும் பங்குபற்றவுள்ளனர்.
3 நாட்கள் தஜிகிஸ்தானில் தங்கியிருக்கவுள்ள ஜனாதிபதி மாநாட்டில் கலந்துகொள்ள வரும் முக்கிய தலைவர்களுடன் பிரத்தியேக சந்திப்புகளை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் இன்று வெளிநாடு சென்றார்.. ஜனாதிபதி நாளை செல்கிறார்.
Reviewed by Madawala News
on
June 12, 2019
Rating: