ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்து ஒரு இளைஞன் உயிரிழப்பு.. மற்றொருவர் கவலைக்கிடம்.


ஏறாவூர், சந்திவெலி பகுதியில் இன்று (26) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலையில் இருந்து அக்கறைபற்று நோக்கி பயணித்த பேருந்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 17 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் 17 வயதுடைய ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்திவெலி பகுதியை சேர்ந்த மனோகரன் சுதன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். அத்துடன் பாஸ்கரன் ரிகஷனன் என்பவரே படுகாயம் அடைந்துள்ளார்.

ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்து ஒரு இளைஞன் உயிரிழப்பு.. மற்றொருவர் கவலைக்கிடம். ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்து ஒரு இளைஞன் உயிரிழப்பு.. மற்றொருவர்  கவலைக்கிடம். Reviewed by Madawala News on June 26, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.