வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.


வென்னப்புவ பிரதேச சபையினால் நடாத்தப்படும் தங்கொடுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள்
வியாபாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான கடிதம் ஒன்று வென்னப்புவ பிரதேச சபை தலைவர் சுசந்த பெரேராவினால் வெளியிடப்பட்டுள்ளது.

பிரதேசத்தில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களை அடுத்து அப்பிரதேசங்களில் இருக்கும் முஸ்லிம் மக்கள் பொது சந்தை பகுதிக்கு வருவதற்கு ஏனைய மக்களும் வியாபார சமூகமும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக பிரதேச சபை தலைவர் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி குறித்த வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. D C
வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. Reviewed by Madawala News on June 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.