( GMOA) அரசாங்க வைத்திய அதிகாரிகள் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக... பொதுமக்கள் GMOA இற்கு எதிராக... களுத்துறையில் பரபரப்பு சம்பவம்.


அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு
எதிராக பத்து இலட்சம் கையொப்பங்களைச் சேகரிக்கும் நிகழ்வு இன்று முதல் கட்டமாக களுத்துறை, நாகொட போதனா மருத்துவமனையில் ஆரம்பமானது.

இதன்போது குறித்த நிகழ்வுக்கு நகரசபை, பிரதேசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் சிலர் எதிர்ப்புத் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்குச் சற்று பதற்றமான நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப் படுகிறது.

அதனைத் தொடர்ந்து ஸ்தலத்திற்கு பொலிஸ் அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டு, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோதும், பொதுமக்கள் தொடர்ந்தும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர்களுக்கு எதிர்ப்பினை தெரிவித்ததை அடுத்து, நாகொட வைத்தியசாலையின் பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கு வருகைதந்திருந்த அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள், வைத்தியசாலையின் பின் வாயிலினூடாக வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. D C
( GMOA) அரசாங்க வைத்திய அதிகாரிகள் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக... பொதுமக்கள் GMOA இற்கு எதிராக... களுத்துறையில் பரபரப்பு சம்பவம். ( GMOA) அரசாங்க வைத்திய அதிகாரிகள் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக... பொதுமக்கள் GMOA இற்கு எதிராக... களுத்துறையில் பரபரப்பு சம்பவம். Reviewed by Madawala News on June 24, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.