தேர்தல் பதிவுகள் நடைபெறுகின்ற காலமிது. அந்த வகையில், கிராம சேவகர்கள் தேர்தல் பதிவோடு சம்பந்தப்பட்ட இரண்டு படிவங்களை வீடுகளுக்குக் கொண்டு வந்த தருகின்றனர்.
அதில், இம்முறை அக்குறணையின் பல பகுதிகளில் மேலதிகமான இன்றுமொரு படிவத்தை (சொத்து மற்றும் சில தனிப்பட்ட தகவல்களை வேண்டி) வழங்கியிருக்கின்றார்கள்.
தேர்தல் தினைக்களத்தோடு சம்பந்தப்பட்ட 2 படிவங்களை உடனடியாகப் பூர்த்தி செய்து கொடுக்குமாறு வேண்டப்படுகின்றனர்.
மற்றைய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வழங்க வேண்டி அவசியமில்லை.
அக்குறணையில் அண்மையில் நியமனம் பெற்ற சில கிராம சேவகர்கள், (பிரதேச செயலாளரின் அனுமதியின்றி) அக்கிராமத்திலுள்ளவர்களது தகவல்களை பெற்றுக் கொள்வதற்காகவே இதனை செய்திருக்கின்றார்கள் எனத் தெரியவருகின்றது.
இது பற்றி பிரதேச செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனவே, தனிப்பட்ட தகவல்களை திரட்டுவதற்கான மேலதிகமான படிவத்தை யாரும் பூர்த்தி செய்து வழங்க வேண்டியதில்லை.
– இர்பான் காதர் : அக்குரணை
அக்குறணை மக்களுக்கான முக்கிய தகவல். ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Reviewed by Madawala News
on
June 10, 2019
Rating: