முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹா
ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்ய, பொலிஸ் தலைமையகம் வழங்கியிருந்த கால அவகாசம் இன்றுடன் (12) நிறைவடையவுள்ளது.
இதற்கமைய, இன்று மாலை 4 மணிவரை, முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் என, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
குறித்த மூவருக்கு எதிராக, நேற்றைய தினம் வரை 11 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, ரிஷாட்டுக்கு எதிராக நேற்று முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யும் கால அவகாசம் இன்று மாலை 4 மணியுடன் முடிகிறது.
Reviewed by Madawala News
on
June 12, 2019
Rating: