மினுவாங்கொடையில் முஸ்லிம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்



மினு­வாங்­கொடை, கல்­லொ­ழுவை பிர­தே­சத்தில் முஸ்லிம் பெண் ஒருவர் மீது தாக்­குதல்
நடத்­தப்­பட்­டுள்ள சம்­பவம் ஒன்று நேற்று முன்­தினம் இடம்­பெற்­றுள்­ளது.

இது பற்றி மேலும் தெரிய வரு­வ­தா­வது,

கொழும்பு அப்­பிள்­வத்­தையை சேர்ந்த பெண் ஒருவர் கல்­லொ­ழு­வையில் வசிக்கும் தனது மக­ளது வீட்­டுக்கு வருகை தந்­துள்ளார். பின்னர் திங்கட் கிழமை காலை அங்­கி­ருந்து கொழும்பு செல்­வ­தற்­காக மினு­வாங்­கொடை நக­ரத்தை நோக்கி நடந்து வந்­துள்ளார். இதன்­போது அவரை நெருங்கி வந்த முச்­சக்­கர வண்­டியில் இருந்த இருவர் அவரை வழிமறித்து, அவ­ரது முந்­தா­னையைப் பிடித்து இழுத்து அவ­ரது கழுத்தில் கட்­டி­விட்டு முச்­சக்­கர வண்­டியைச் செலுத்தி அப் பெண்ணை வீதியில் இழுத்துச் சென்­றுள்­ளனர்.

தனால் உடல் முழு­வதும் காயங்­க­ளுக்­குள்­ளான அப் பெண் கூக்­கு­ர­லிட்­ட­துடன் ஒரு­வாறு முந்­தா­னை­யி­லி­ருந்து விடு­பட்டு அவர்­க­ளி­ட­மி­ருந்து தப்­பி­யுள்ளார். இத­னை­ய­டுத்து அவ்­வி­டத்­துக்கு வந்த மற்­றொரு முச்­சக்­கர வண்­டியின் உத­வி­யுடன் அவர் மீண்டும் தனது மகளின் வீட்­டுக்குச் சென்­றுள்ளார்.

குறித்த பெண்­மணி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்­றுள்­ள­துடன் மினு­வாங்­கொடை பொலிஸ் நிலை­யத்­திலும் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இச் சம்­பவம் தொடர்பில் சி.சி.ரி.வி. பதி­வு­களின் உத­வி­யுடன் விசா­ர­ணை­களை முன்னெடுத்துள்ளதாகவும் சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மினுவாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

vidivelli 
மினுவாங்கொடையில் முஸ்லிம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் மினுவாங்கொடையில் முஸ்லிம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் Reviewed by Madawala News on June 26, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.