மினுவாங்கொடை, கல்லொழுவை பிரதேசத்தில் முஸ்லிம் பெண் ஒருவர் மீது தாக்குதல்
நடத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது,
கொழும்பு அப்பிள்வத்தையை சேர்ந்த பெண் ஒருவர் கல்லொழுவையில் வசிக்கும் தனது மகளது வீட்டுக்கு வருகை தந்துள்ளார். பின்னர் திங்கட் கிழமை காலை அங்கிருந்து கொழும்பு செல்வதற்காக மினுவாங்கொடை நகரத்தை நோக்கி நடந்து வந்துள்ளார். இதன்போது அவரை நெருங்கி வந்த முச்சக்கர வண்டியில் இருந்த இருவர் அவரை வழிமறித்து, அவரது முந்தானையைப் பிடித்து இழுத்து அவரது கழுத்தில் கட்டிவிட்டு முச்சக்கர வண்டியைச் செலுத்தி அப் பெண்ணை வீதியில் இழுத்துச் சென்றுள்ளனர்.
தனால் உடல் முழுவதும் காயங்களுக்குள்ளான அப் பெண் கூக்குரலிட்டதுடன் ஒருவாறு முந்தானையிலிருந்து விடுபட்டு அவர்களிடமிருந்து தப்பியுள்ளார். இதனையடுத்து அவ்விடத்துக்கு வந்த மற்றொரு முச்சக்கர வண்டியின் உதவியுடன் அவர் மீண்டும் தனது மகளின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
குறித்த பெண்மணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதுடன் மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் சி.சி.ரி.வி. பதிவுகளின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மினுவாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
vidivelli
மினுவாங்கொடையில் முஸ்லிம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
Reviewed by Madawala News
on
June 26, 2019
Rating: