புதைக்கபட்ட தீவிரவாதிகளின் சடலங்கள் நாளை மீண்டும் தோண்டி எடுக்கப்படுகிறது.


சாய்ந்தமருதில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தி பலியான சில பயங்கரவாதிகளினதும்
அவர்களின் குடும்பத்தாரினதும் சடலங்கள் நாளைய தினம் தோண்டி எடுக்கப்படவுள்ளன.

அம்பாறை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இவ்வாறு குறித்த சடலங்கள் தோண்டி எடுக்கப்படவுள்ளன.

மரபணு பரிசோதனைகளுக்காக இந்த சடலங்கள் தோண்டி எடுக்கப்படவுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற குறித்த தாக்குதலின்போது 15 பேர் உயிரிழந்திருந்தனர்.

பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட சூத்திரதாரியான சஹ்ரான் ஹஸீமின் தந்தை, அவரின் சகோதரர்கள் இரண்டு பேர் மற்றும் ஒரு சகோதரரின் மனைவி ஆகியோரும் சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.
புதைக்கபட்ட தீவிரவாதிகளின் சடலங்கள் நாளை மீண்டும் தோண்டி எடுக்கப்படுகிறது. புதைக்கபட்ட தீவிரவாதிகளின் சடலங்கள் நாளை  மீண்டும் தோண்டி எடுக்கப்படுகிறது. Reviewed by Madawala News on June 06, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.