மரணத் தண்டனையை நடைமுறைப்படுத்துமாறு, ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு,
இதுவரை தமது திணைக்களத்துக்கு கிடைக்கவில்லையென, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் இந்த உத்தரவானது, ஜனாதிபதியின் செயலாளரால் நீதி அமைச்சின் செயலாளருக்கு முதலாவதாக அறிவிக்கப்பட வேண்டும் என, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பின்னர், இந்த உத்தரவு நீதியமைச்சின் செயலாளர் ஊடாக சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் நாயகத்தக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெவ்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் மரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள 1217 கைதிகளில் சிறைச்சாலைகளில் இருப்பதாகவும் இவர்களுள் 5 பெண்களும் 6 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விடுத்துள்ள மரண தண்டனை உத்தரவு, இதுவரை திணைக்களத்துக்கு கிடைக்கவில்லை.
Reviewed by Madawala News
on
June 27, 2019
Rating: