பியகம பிரதேச எல்லைக்குள் புதிதாக பள்ளி நிர்மாணிக்க அனுமதி வழங்கக் கூடாது.


பிய­கம பிர­தேச சபைக்­குட்­பட்ட பிர­தே­சத்தில் பதி­தாக முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள் நிர்­மா­ணிப்­ப­தற்­கான
அனு­ம­தியை ரத்து செய்­யவும்  பொது இடங்­களில் புர்கா அணிந்து செல்­வதை தடை­செய்­யவும்  பிய­கம பிர­தேச சபையில் கொண்­டு­வ­ரப்­பட்ட  இரு பிரே­ர­ணை­களும் நிறை­வேற்­றப்­பட்­டன.

பிய­கம பிர­தேச சபைத்­த­லைவர் ஆனந்த கணே­பொ­லவின் (பொஜ.பெ.) தலை­மையில் ஜூன் மாதத்­துக்­கான அமர்வு அண்­மையில் (கடந்த வியாழன்) மாவ­ர­மண்­டிய பிர­தேச சபை கேட்போர் கூடத்தில் நடை­பெற்­றது.

பிய­கம பிர­தே­சத்தில் புதி­தாக முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள் நிர்­மா­ணிக்க அனு­மதி வழங்­கப்­ப­டக்­கூ­டாது என்ற பிரே­ர­ணையை சமர்ப்­பித்து ஆனந்த கணே­பொல கருத்து தெரி­விக்­கையில் கூறி­ய­தா­வது;

பிய­கம பிர­தே­சத்தில் வாழும் 180,000 பெளத்த சிங்­க­ள­வர்­க­ளுக்கு 57 விகா­ரைகள் உள்­ளன. ஆனால் இங்கு வாழும் 18,000 முஸ்­லிம்­க­ளுக்கு 27 பள்­ளி­வா­சல்கள் உள்­ளன. அதே­வேளை இது தேவைக்கும் அதி­க­மாகும். கோழிக் கூண்­டுகள் போன்­று. எல்லா இடங்­க­ளிலும் பள்­ளி­வா­சல்கள் அமைப்­பது பொருத்­த­மற்­றது என்றார்.

புர்­காவை தடை செய்யும் பிரே­ர­ணையை உறுப்­பினர் ஆஸிரி ஸசிந்த விதா­னகே  (பொஜ.பெ.) சமர்ப்­பித்­த­தோடு இது தொடர்­பாக கருத்து தெரி­வித்த எம்.ஏ.எம் இர்பான் (ஐ.தே.க.) புர்கா தொடர்­பாக அர­சாங்கம் ஏற்­க­னவே தடை­வி­தித்­துள்­ள­தா­கவும் புதிய பள்ளிவாசல்கள் நிர்மாணிக்க அனுமதி வழங்கல் தொடர்பாக அடுத்தமாத அமர்வில் முறைப்படி பிரேரணையை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

நன்றி  -Vidivelli
பியகம பிரதேச எல்லைக்குள் புதிதாக பள்ளி நிர்மாணிக்க அனுமதி வழங்கக் கூடாது. பியகம பிரதேச எல்லைக்குள் புதிதாக பள்ளி நிர்மாணிக்க அனுமதி வழங்கக் கூடாது. Reviewed by Madawala News on June 11, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.