Unbeaten நியூசிலாந்தை 237 ரன்களுக்குள் மடக்கி அசத்தலாக வென்றது பாகிஸ்தான்.


உலகக்கோப்பை தொடரில் இதுவரை தோல்வியடையாத அணிகளுள் ஒன்றாக இருந்துவரும் நியூசிலாந்தை,
237 ரன்களுக்குள் மடக்கிய பாகிஸ்தான் அணி அந்த ஓட்டங்களை 4 விக்கட் இழப்புக்கு இறுதி ஓவரில் எட்டியது  .
 இந்த வெற்றி பாகிஸ்தான்  ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பாகிஸ்தான் – நியூசிலாந்து மோதும் ஆட்டம் இன்று பர்மிங்காம் இல் இடம்பெற்றது.  இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் நீஷம், கிராண்ட்ஹோம் மற்றும் வில்லியம்ஸ் போன்றோர் சிறப்பாக ஆடினாலும், அந்த அணியால் 237 ரன்களைத் தாண்ட முடியவில்லை. நீஷம் வெறும் 3 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு அந்தளவிற்கு சிறப்பாக இருந்தது. ஷகீன் அஃப்ரிடி அற்புதமாக பந்துவிசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அவர் 10 ஓவர்களில் கொடுத்த ரன்கள் வெறும் 28 மட்டுமே.

238 என்ற எளிமையான இலக்கை நோக்கி பயணத்தைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி, மிக நிதானமாக ஆடியது.  பாகிஸ்தானின் பாபர் ஆஸம்  சிறப்பாக ஆடி 101  ஓட்டங்களை அடித்தார்.

இன்றையப் போட்டி வெற்றியுடன் , அரையிறுதியில் நுழைவதற்கான பாகிஸ்தானின் வாய்ப்பு சற்று கூடி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Unbeaten நியூசிலாந்தை 237 ரன்களுக்குள் மடக்கி அசத்தலாக வென்றது பாகிஸ்தான். Unbeaten  நியூசிலாந்தை 237 ரன்களுக்குள் மடக்கி அசத்தலாக வென்றது பாகிஸ்தான். Reviewed by Madawala News on June 26, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.