நேற்றிரவு (10) ஒன்பது மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ரமலான் முகம்மத் ஜாபிர் என்ற
34 வயது நபர் உயிரிழந்துள்ளார்.
மன்னார் - சிலாவத்துறை வீதில் அரிப்பு பாலம் எனபப்டும் இடத்தில் ட்ரக்டர் ரக வண்டி ஒன்று - மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நேருக்கு நேராக மோதியதிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர் மோட்டார் சைக்கிலில் பயணித்த அருவக்குன்று, முருங்கன் என்ற இடத்தை சேர்ந்தவர் ஆவார். படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரின் ஜனாஸா தற்போது சிலாவத்துறை வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளதுடன், டிராக்டர் சாரதி கைது செய்யபட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் விபத்தில் ரமலான் முகம்மத் ஜாபிர் என்ற 34 வயது நபர் உயிரிழப்பு.
Reviewed by Madawala News
on
June 11, 2019
Rating: