வடமேல் மாகாணத்தின் பல்வேறு முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம்களின் சொத்துக்கள் மற்றும் உடைமைகள்
என்பவற்றின் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவிடம் இன்று (18) வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மற்றும் நாமல் குமார ஆகியோர் குளியாப்பிட்டி பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை இடம்பெற்ற இடத்தில் இருந்ததற்கான காணொளி வௌியாகியிருந்தது.
அப்டேட் ..
வாக்குமூலம் வழங்கிய தயாசிறி ஜயசேகர சற்றுமுன்னர் கொழும்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இருந்து வெளியேறி சென்றுள்ளார்.
வன்முறைச் சம்பவம்: ஸ்ரீ ல.சு.க. செயலாளர் தயாசிறி எம்.பி.யிடம் வாக்குமூலம்
Reviewed by Madawala News
on
May 18, 2019
Rating: