மற்ற உறுப்பினர்களை பற்றி தனக்கு கூறத்தெரியாது ஆனால் தான் மிக கடுமையான தீர்மானம்
ஒன்றை எடுப்பதாக ஐக்கிய தேசிய கட்சி பின்வரிசை உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன குறிப்பிட்டார்.
அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு வாக்களிப்பது தொடர்பில் அவரிடம் வினவப்பட்ட போது அவர் இதனை குறிப்பிட்டார்.
தீவீரவாதத்திற்கு எதிராக , மதவாதத்திற்க்கு எதிராக ஜனநாயக நீரோட்டத்தை குலைக்கும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக தான் மிக கடுமையான தீர்மான எடுக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ராஜாங்க அமைச்சர் ரஞ்சனை தொடர்ந்து காவிந்த அமைச்சர் ரிஷாதுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் ரிஷாதுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ; ரஞ்சனை தொடர்ந்து காவிந்த ஜயவர்தன போர்க்கொடி !!
Reviewed by Madawala News
on
May 17, 2019
Rating: