மத்தரஸா கல்வி மற்றும் இஸ்லாம் கல்வியை கட்டுப்படுத்த சட்டமூலம் தொடர்பில்
கலந்துரையாடியுள்ளதாக பிரதம மந்திரி ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
அலரிமாளிகையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் ,
மத்தரஸா கல்வி மற்றும் இஸ்லாம் கல்வியை கட்டுப்படுத்த சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடினோம்,அதற்கு உள்ளடக்கப்படவேண்டிய திருத்தங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினோம்.
தொடர்ந்து சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் விடயதான அமைச்சுடன் பேசி திருத்த சட்ட யோசனையை அமைச்சரவைக்கு அனுப்பவுள்ளோம்.
மேலும் இந்த நாட்டிற்கு ஷரியா பல்கலைகழகம் ஒன்று தேவை இல்லை என்பதை நான் கூறியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
மத்தரஸா கல்வி மற்றும் இஸ்லாம் கல்வியை கட்டுப்படுத்த சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடல் ..
Reviewed by Madawala News
on
May 17, 2019
Rating: