அமைச்சர் ரிஷாதுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்க
சவாலை பொறுப்பேற்றுள்ளதாக அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற முஸ்லிம் அமைச்சர்களுடான கலந்துரையாடலில் அவர் முஸ்லிம் எம்பிக்களிடம் நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தினை வெற்றிகரமாக எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ளதாக அறியமுடிகிறது.
சற்று முன்னர் அமைச்சர்கள் றிஷாத் ,ஹக்கிம் , ஹலீம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பிரதமரை அலரி மாளிகையில் சந்தித்து பேசியுள்ளனர். இதன்போதே பிரதமர் முஸ்லிம் எம்பிக்களிடம் இதனை குறிப்பிட்டுள்ளதாக அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
அமைச்சர் ரிஷாதுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ; ரனில் விக்ரமசிங்க சவாலை பொறுப்பேற்றார்...
Reviewed by Madawala News
on
May 17, 2019
Rating: