வத்தளை, மாபோல பிரதேசத்தில் வசித்து வரும் மிகபெரும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் மேல்
மாகான புலனாய்வுத்துறை மற்றும் போலீஸ் அதிரடிப்படையினரால் கைது செய்யபட்டுள்ளார்.
இவருக்கு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கைது செய்யபட்டு இருக்கும் அதேவேளை, இரண்டு கடவுச் சீட்டுக்கள் வைத்து உலகின் பல நாடுகளுக்கு சென்றுள்ளதாகவும், குறிப்பாக துபாய் செல்லும் வேளையில் அங்கு மாகந்துற மாதுஷ் மற்றும் கஞ்சிபாணி இம்ரானின் வதிவிடங்களில் தங்குவதாகவும் போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மாபோல பிரதேசத்தில் இரு சொகுசு வீடுகள் இவருக்கு இருப்பதாகவும் , இவரின் இரு மனைவியர் மற்றும் பிள்ளைகள் அந்த வீடுகளில் வசித்து வருவதாகவும், அவரிடம் இருந்த ஜெர்மன் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும்.
2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றை ஓட்டி வாழ்வை ஒட்டிய இவர் தற்போது கார்கோ நிறுவனம் ஒன்றுக்கு எவ்வாறு அதிபதியானர் என்ற விசாரணை இடம்பெறுவதாகவும்,
சிரேஷ்ட DIG எம்.ஆர் லத்தீப் அவர்களின் பணிப்பின் பேரில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
News Source : http://www.lankadeepa.lk/latest_news/1-550521
கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் கைது... 'பல பெரும்புள்ளிகளுடன்' தொடர்பு என போலீசார் தகவல்.
Reviewed by Madawala News
on
May 16, 2019
Rating: