இன்று முஸ்லிம் சமூகத்தினுடைய வாய்களை கட்டி வைத்து அடிக்கின்ற ஒரு சூழ்நிலையை காண்கின்றோம்.


-பி. முஹாஜிரீன்-
இன்று முஸ்லிம் சமூகத்தினுடைய வாய்களை கட்டி வைத்து அடிக்கின்ற ஒரு சூழ்நிலையை காண்கின்றோம்.
அதாவது, யாரெல்லாம் இந்த முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுக்கின்றார்களோ அவர்களது குரல்வளையை நசுக்கி விடுகின்ற நிலைமை தோன்றியுள்ளது. அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க முடியாது' என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள்  தவிசாளரும் நகர்வெர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவருமான சட்டத்தரணி எம்.எ. அன்சில் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, தற்போதைய நாட்டு நிலைமைகள் தொடர்பாகவும் அமைச்ர் ரிஷாட் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாகவும் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, இன்று (20) ஒலுவில் துறைமுக சுற்றுலா விடுதியில் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்றூப் தலைமையில் நடைபெற்றபோது அதில் கருத்துத் தெரவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து சட்டத்தரணி அன்சில் கருத்துத் தெரிவிக்கும்போது, 
'இன்று இந்த சமூகத்திற்காக குரல் கொடுக்கின்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஆளுநர்களான ஹிஸ்புள்ளாஹ், ஆஸாத் சாலி போன்றவர்களை இலக்கு வைத்து ஊடகங்களுடாக இனவாதிகள் நடத்துகின்ற உச்சகட்ட தாக்குதல்தான் அமைச்சர் ரிஷாட் மீதான, பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையாகும். அமைச்சருக்கெதிரான பிரேரணை என்பதை விடவும் முழு முஸ்லிம் சமூகத்தினதும் உரிமைக் குரலை ஓடுக்குகின்ற ஒரு செயற்பாடாகவே இதனைப் பார்க்க வேண்டும்.

எந்தவொரு இக்கட்டான நிலையிலும் தனது கடமையைச் சரியாகச் செய்கின்ற ஒருவரை, அவரது பேசுகின்ற உரிமையைத் தடுக்கின்ற செயற்பாடாகவே இதனைப் பார்க்கலாம்.
வெளி நாடுகளிலே, இராணுவத்தின் அநியாயமான செயற்பாடுகளை, மக்களுக்கெதிராகச் செய்கின்ற அட்டூழியங்களை பல அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலே ஊடகவியலாளர்கள் வெளிக் கொண்டு வருவார்கள். இது ஊடகத்தின் தார்மீகப் பணியாகும். ஆனால், சில ஊடகங்கள் செய்யும் அநியாயத்தை இராணுவத் தளபதி ஒருவர் நிறுத்துங்கள் என்று சொல்லுகின்ற நிகழ்ச்சி இலங்கையில் மாத்திரம்தான் நடைபெற்றிருக்கிறது.

கத்திகளை விற்பதற்கோ, காட்சிப்படுத்துவதற்கோ இலங்கையில் தடையில்லை. ஆனால், அதனை முஸ்லிம்கள் மாத்திரம் வீடுகளில் வைத்திருந்தால் அதனை பெரும் யுத்த ஆயுதங்கள் வைத்திருப்பது போன்று, பெருங் குற்றமாக இனவாத ஊடகங்கள் சித்தரித்துக் காட்டுகின்றபோது, ஒரு இராணுவத் தளபதி அந்த ஊடகங்களை பார்த்து 'உங்களது நாடகங்களை நிறுத்துங்கள்' என்கின்ற நிலை இலங்கையிலேதான் நடைபெற்றிருக்கிறது. இவ்வாறு இந்த நாட்டிலே சில ஊடகங்கள் செய்கின்ற அநியாயத்தை இராணுவத் தளபதி நிறுத்துமளவுக்கு ஊடக தர்மம் செயற்படுகின்றது என்ற நிலையிலே, இராணுவத் தளபதிக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கின்றோம்.

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்கள், தமது மக்களை பொறுமையோடு வழிப்படுத்தியமைக்காகவும் இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களை நம்பிக்கையோடு பார்த்மைக்காகவும் இந்த நாட்டு முஸ்லிம்கள் நன்றி கூறுகிறார்கள். நாம் எல்லோரும் அடிமைகளாகி விடுவோமோ என்று பயப்படுகின்ற அளவுக்கு எங்களது சமூகத்தைச் சேர்ந்தவர்களே பயந்திலிருந்தபோது, சில முஸ்லிம் தலைவர்கள் இது பௌத்த நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற நிலையிலே, இந்த நாடு பௌத்த நாடல்ல, இது எல்லோருக்குமான நாடு என்று கூறிய அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் நாங்கள் நன்றி கூற வேண்டும். இவ்வாறு எமது முஸ்லிம் தலைவைர்கள் சொல்லாமல் மௌனமாகவிருப்பது கவலையான விடயம்.

நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். எமது சமூகம் நம்பிக்கை கொள்ள வேண்டும். நம்பிக்கையை இழந்தவர்களாக எமது சமூகம் இருக்க முடியாது. யாரோ ஒரு சிலர் செய்த இந்த மடமைத் தனத்திற்காக ஒட்டு மொத்த சமூகமும் தலைகுனிந்து அடிமைகளாகிச் செல்ல வேண்டிய தேவையில்லை. இங்கிருக்கின்ற எல்லோருமே எங்களை அடிமைகளாக்கவே முயற்சிக்கிறார்கள். மொடரேட் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டு இனவாதிகளுக்கு மத்தியிலே நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்கின்ற தலைவர்கள் எங்களுக்குத் தேவையில்லை.

எங்களுக்கு முன்னிலையிலே, எமது சமூகத்திற்கு எப்படி இக்கட்டான நிலை வந்தாலும், ஒரு தகப்பனுடைய வலியை உணர்ந்து ஒரு தலைவன் இராணுவத் தளபதியோடு பேசுகின்றான் என்கின்ற அளவுக்கு தன்மீதிருந்த எத்தனையோ குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியிலும், அந்த தந்தைக்காக பேசுகின்ற கடமை ஒரு தலைவன் என்ற வகையில் தனக்கு இருக்கிறது என்று பேசுகின்ற தலைவர்களை சமூகம் பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கிறது.

நாங்கள் மொடரேட் முஸ்லிம்களாக எங்களைக் காட்டிக் கொள்ள வேண்டிய தேவையில்லை. நாங்கள் முஸ்லிம்கள்ளூ எங்களுக்கென்று குர்ஆனும், ஹதீதும் இருக்கிறது. அவற்றை நாம் பின்பற்றுவதற்கு யாரையும் பயப்பட வேண்டிய தேவையில்லை. நடந்த இந்த நிகழ்வுகளுக்காக எமது அன்றாட நடவடிக்கைகளிலிருந்து விலகிச் செல்லத் தேவையில்லை. பல பக்கங்களிலும் எமது சமூகத்தை அடிமைப்படுத்துகின்ற செயற்பாடுகளுக்கு ஊக்கம் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.

ரிஷாட் பதியுதீனுக்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தால், ஹிஸ்புள்ளாவுக்கு எதிராக இனவாத செயற்பாடுகள் கட்டவிழ்த்து விடப்பட்டால் அவாக்ளுக்கு உறுதுணையாக இந்த சமூகம் இருக்கிறது என்பதை வெளிக்காட்டுவதற்கே இவ்வாறான ஊடகவியலாளர் சந்திப்புக்களைச் செய்கின்றோம்.
இந்த சமூத்திற்காக யாரெல்லாம் தமது குரலை உயர்த்திப் பேசினார்களோ, அவர்களுக்கெதிரான சதிகளுக்கு முன்னின்று தோள்கொடுக்கின்றவாகளாக நாங்கள் மாற வேண்டும். இந்த நிலைமை ஒவ்வொரு முஸ்லிம் பிரதேசங்களிலும் வெளிப்படத் தொடங்கும். யாரோ ஒரு கூட்டம் செய்த தவறுக்காக, ஒட்டு மொத்த சமூகத்தையே அடக்கி ஒடுக்குகின்ற செயற்பாடுகளுக்கு வழிவகுக்கக் கூடாது. முஸ்லிம் பெயர் தாங்கிகள் செய்த தவறுக்காக பாதிக்கப்பட்ட மக்களின் கவலைகளிலே பங்கு கொண்டோம்.

ஆனால், இந்த நிகழ்வுகளின் பின்னால், இனவாதிகளின் வக்கிர புத்திகளிலிருந்த அத்தனை எண்ணங்களையும் கொண்டு வந்து, எமது சமூகத்திலே திணித்து எங்களுக்கெதிராக சட்டங்களைத் திருத்தியோ அல்லது வேறு விதமாகவோ செயற்பட முனைந்தால், எல்லா உரிமைகளையும் இழந்து வாழ்கின்ற சமூகமாக நாம் இருக்க முடியாது.

புதிதாக எங்களுக்கு எந்த உரிமையும் சட்டமும் தேவையில்லை. இருப்பதையாவது பாதுகாத்துக் கொள்வோம் என்கின்ற இடத்திற்கு,  இன்று எமது சமூகத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். ஆகவே, அந்த இடத்திலே இருக்கிறோம் என யாரும் கவலைப்படத் தேவையில்லை. இந்த நாட்டிலே முஸ்லிம்களும் பிரஜைகள்தான். இது பல்லின சமூகம் வாழுகின்ற நாடு. இது இலங்கையருக்கான நாடு. நாங்கள் பிறந்த வளர்ந்த நாடு. முஸ்லிம்கள் வந்தேறு குடிகள் என்றால் இங்குள்ள பௌத்த, இந்து எல்லா இனத்தவர்களும் வந்தேறு குடிகள்தான். வந்த காலத்தில்தான் வேறுபாடு. ஆனால், பெரும்பான்மை சிறுபான்மை என்று இருக்கலாம். ஏல்லோரும் இந்த நாட்டின் சொந்தக்காரர்களே. இந்த நாட்டிலே சம உரிமையோடும் எல்லோரும் வாழக்கூடிய உரிமை இருக்கிறது.

இந்த நிலைமைகளிலிருந்து நாம் மாற வேண்டும். எங்களுடைய மக்களுக்கு தைரியத்தைக் கொடுக்கின்றவர்களாக தலைவர்கள் இருக்க வேண்டும். அவ்வாறான ஒரு தலைவராக இருக்கின்ற ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையிலே இனவாதம் வெல்லுமா தோற்குமா என்பதற்கப்பால், ரிஷாட் எனும் குரல் ஓங்கி ஒலிப்பதற்கான வேலைத் திட்டத்தை சமூகத்திலே முன்னெடுக்க வேண்டும்.
அவருக்கெதிரக முன்வைக்கப்பட்டுள்ள அத்தனை குற்றச்சாட்டுக்களும் மிகப் பொய்யானவை என்பதை அவருக்கு அருகிலிருக்கின்றவர்கள் என்ற வகையில் நாங்கள் அறிவோம். இஸ்லாமிய மார்க்கத்தை சரியாகப் பின்பற்றி பேணுதலாக வாழ்கின்ற இந்த அமைச்சர் ரிஷாட் இவ்வாறான மிலேச்சத் தனத்திற்கு எந்த வகையிலும் துணை போகக் கூடியவரல்ல என மிக நம்பிக்கையோடு தெரிவிக்கின்றோம். இதேபோன்றுதான், ஆளுநர்களான ஹிஸ்புல்லா, ஆஸாத் சாலி, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோருக்கெதிரான குற்றச் செயற்படுகளும் பொய்யானவை. காழ்ப்புணர்ச்சி மிக்கவை.

எனவே, இவ்வாறான தலைவர்களுக்கெதிரான செயற்பாடுகளை முறியடிக்க முஸ்லிம் சமூகம் பக்கபலமாக செயற்பட வேண்டும். முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கின்ற தலைமைகளைப் பாதுகாக்க சமூகம் முன்வர வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.

இதில் நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ. தாஹீர், அஷ்ஷெய்க் ஹனீபா மதனி, பிரதேச சபை உறுப்பினர்களான எச்.எம்.சிறாஜ், ஆர்.றிஸ்பா ஆகியொரும் கலந்த கொண்டனர்.
இன்று முஸ்லிம் சமூகத்தினுடைய வாய்களை கட்டி வைத்து அடிக்கின்ற ஒரு சூழ்நிலையை காண்கின்றோம். இன்று முஸ்லிம் சமூகத்தினுடைய வாய்களை கட்டி வைத்து அடிக்கின்ற ஒரு சூழ்நிலையை காண்கின்றோம். Reviewed by Madawala News on May 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.