சட்டவிரோதமான முறையில், வெடிபொருள்கள் உள்ளிட்ட ஆயுத, உபகரணங்களைத் தம்வசம்
வைத்திருக்கும் நபர்களைத் தேடி, திங்கட்கிழமை (20) முதல், நாடு முழுவதிலும், விசேட சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
அனுமதிப் பத்திரங்களின்றி, வெடிபொருட்களைத் தம்வசம் வைத்திருப்பவர்களுக்கு, அவற்றை ஒப்படைப்பதற்கான காலஅவகாசம், கடந்த 12ஆம் திகதி முதல் வழங்கப்பட்டிருந்தது.
இந்தக் காலஅவகாசம், 20அம் திகதி அதிகாலை 6 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகத்தால், நேற்று முன்தினம் (15) அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தக் காலஅவகாசம் முடிவடைந்தவுடன், நாடு முழுவதிலும், விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்
திங்கட்கிழமை (20) முதல், நாடு முழுவதிலும், விசேட சுற்றிவளைப்புத் தேடுதல் வேட்டை.
Reviewed by Madawala News
on
May 17, 2019
Rating: