பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை 15000 ரூபாவால் அதிகரிக்க அமைச்சரவை
பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.
தற்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் காலம் சென்ற உறுப்பினர்களின் மனைவியர் உள்ளிட்ட 421 பேர் ஓய்வூதியம் பெறும் நிலையில் அவர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவை 10000 ரூவாவால் அதிகரிக்க முன்னதாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் மேலும் 15000 ரூபாவை அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மாதம் அரசுக்கு 6.8 மில்லியன் மேலதிகமாக செலவிட வேண்டி ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை 15000 ரூபாவால் அதிகரிக்க அமைச்சரவை பத்திரம்..
Reviewed by Madawala News
on
May 17, 2019
Rating: