தாக்குதலுடன் தொடர்புடைய பலரை கைது செய்ய முடியும் என தெரிவித்துள்ள இலங்கைக்கு வருகை தரவுள்ள இன்டர்போல்.
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை
முன்னெடுத்துள்ள இலங்கை விசாரணைக்குழுவுக்கு உதவும் வகையில் இன்டபோல் பொலிஸார் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.
இதற்கமைய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, வெடிமருந்து, தடவியல் மற்றும் குற்றச்சம்பவங்கள் தொடர்பான விசேட நிபுணர்கள் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக இன்டபோல் தெரிவித்துள்ளது.
அதேவேளை இலங்கை அரசாங்கம் மேலும் உதவிகளை கோரினால் தாம் செய்வதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள இன்டபோல் தலைமை அதிகாரி, தம்மிடம் இருக்கும் தரவுகளை வைத்து தாக்குதலுடன் தொடர்புடைய பலரை கைது செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார். D C
தாக்குதலுடன் தொடர்புடைய பலரை கைது செய்ய முடியும் என தெரிவித்துள்ள இலங்கைக்கு வருகை தரவுள்ள இன்டர்போல்.
Reviewed by Madawala News
on
April 22, 2019
Rating: