ஏன்? ஏன்? ஏன்?




வை எல் எஸ் ஹமீட்
கல்முனை ( தமிழ்) பிரதேச செயலக தரமுயர்த்தல் விடயம், ஊள்ளூராட்சிசபை நன்காகப் பிரிப்பு,

மற்றும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல தரப்பட்ட பிரச்சினைகளை இப்பொழுதாவது முஸ்லிம் கட்சிகள் நிபந்தனையாக முன்வைத்து காலக்கெடு விதித்து சாதிக்கவேண்டும்; அல்லது அரசைவிட்டு வெளியேற வேண்டும்; என்கின்ற கோசத்தை ஏன் முஸ்லிம்களால் முன்வைக்க முடியாமல் இருக்கிறது.

முஸ்லிம் கட்சிகளால் முஸ்லிம்களின் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியவில்லையென்றால் எதற்காக அவர்கள் இன்னும் அரசுடன் இருக்கிறார்கள்?

இதை ஏன் முஸ்லிம்கள் கேட்காமல் இருக்கிறார்கள்?

உலமாக்கள் ஏன் உசும்பாமல் இருக்கிறார்கள்?
பள்ளி நிர்வாகங்கள் ஏன் அசமந்தமாக இருக்கிறார்கள்?


புத்திஜீவிகள் ஏன் புதினமாக மௌனம் சாதிக்கிறார்கள்?

சிவில் அமைப்புகள் ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்?

இளைஞர்கள் ஏன் தூங்குகிறார்கள்?

மொத்த சமூகமும் ஏன் பிரமை பிடித்துப்போய் இருக்கிறது.

இவர்களால் எதுவும் செய்யமுடியாவிட்டால் எதற்காக இவர்கள்?

இவர்களின் சில .........இவர்களை அடிக்கடி முகநூல்களில் பாராட்டுகிறார்களே! எதைச் சாதித்ததற்காக?

இவர்களே கொஞ்சமும் கூச்சமில்லாமல் இந்த அரசு எதையும் செய்துதரவில்லை; என்றும் சிலநேரம் கூறுகிறார்களே! அவ்வாறெனில் இவர்கள் இத்தனை நாளும் ஏன் அரசுடன் இருந்தார்கள்? இனியும் ஏன் இருக்கிறார்கள்?

இதை ஏன் என்று கேட்க நாதியற்ற சமூகமாய் ஏன் என் சமூகம் இருக்கிறது?

எதைச் சாதித்தோம்; என்று சொல்லி அடுத்த தேர்தலுக்கு வருவார்கள்?

எதைச் சாதித்தற்காக அடுத்த தேர்தலில் வாக்களிப்பீர்கள்?

அவர்களும் waste...
சமூகமும் waste....

இப்படிப்பட்ட சமூகம் இன்று இந்த நாட்டில் அனுபவிப்பவை நியாயமா? இல்லையா?

நம் தலைவிதியை நாமே மாற்றாமல் இறைவன் மாற்றுவானா?

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்குமுன் கல்முனைத் ( தமிழ்) பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வாய்ப்பு இருக்கிறது; என்பதை எத்தனைபேர் உணர்ந்திருக்கின்றோம்.

கல்முனையில் பல நூறு கோடி ரூபாய் பெறுமதியான முஸ்லிம்களின் சொத்துக்களின் எதிர்காலம் என்ன?

சிந்திக்க முடியாத சமூகமே!
உன் தலைவிதியை உணரமுடியாத சமூகமே!
ஏமாற்றபடுவதற்கென்றே வாழுகின்ற சமூகமே!
ஏமாறுகின்றபோது மட்டும் ஒரு சிறிய ஓலத்துடன் அமைதியடையும் சமூகமே!

தமிழன் ஒருநாள் தமிழீழம் கேட்டான்!
சமஷ்டி ஆட்சி கேட்டான்!
அதிகாரப்பகிர்வு கேட்டான்!
வட கிழக்கு இணைப்பைக் கேட்டான்!

இன்று அவை அனைத்தையும் ஒரு பக்கம் வைத்துவிட்டு “ கல்முனையை” கேட்கின்றான்!

ஏன் என்று சிந்தித்தாயா?
மொத்த TNA யும் இந்த கல்முனை பிரிப்புக்குப் பின்னால் கொத்தாக நிற்கிறதே! ஏன் என்று புரியுமா உனக்கு?

அன்று முஸ்லிம்கள் ஒத்துழைத்திருந்தால்!

தமீழம் பெற்றிருப்பான் தமிழன்!

வட கிழக்கை நிரந்தரமாக இணைத்திருப்பான்!

நூற்றுக்கணக்கில் முஸ்லிம்களை குருவிகளைச் சுடுவதுபோல் பள்ளிவாசலுக்குள்ளும் வெளியிலும்,
இரவிலும் பகலிலும்
கிராமங்களிலும் நகரங்களிலும் என்று சுட்டுத் தள்ளினான். தாங்கினாய்!

உன்னை சுட்டு, அழிக்கவும் முடியாது; அடிமையாக்கவும் முடியாது; என்பதைப்
புரிந்துகொண்டான்.

உன்னை அடிமையாக்க உன் பொருளாதாரத்தை அழிப்பதே வழி எனப் புரிந்துகொண்டான்.

தெற்கும் கிழக்கும் இணைந்துவிட்டான்.

தெற்கில் உன் சொத்து தொடர் நெருப்பில் வேகுகிறது.

கிழக்கில் தீயிடுவதைவிட, உன் தலைநகரத்தையே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் தயாராகிவிட்டான்.

உனக்குள் ஏற்பட்டிருக்கும் சில்லறைச் சண்டை- உனக்கு சபையா? எனக்கு சபையா? என்பதை கண்டதும் இவர்கள் பிளவுபட்டிருக்கும்போதே காரியத்தைச் சாதித்துக் கொள்ளவேண்டும்; என கங்கணம் கட்டிக்கொண்டான்.

நீ, உனக்குள் சண்டை பிடிக்க அதில் ஒரு பகுதியை அவன் ஆதரித்தான். அந்தப் பகுதிக்கோ பெரும் சந்தோசம் தமிழனே எங்கள் நியாயத்தைப் புரிந்துகொண்டானென, அவன் ஆதரித்ததன் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல்.

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தான். வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் குரல்கள் கிழம்பின; பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டுமென்று.

வரலாற்றில் என்றுமே TNA கல்முனை விடயத்தில் இவ்வளவு முனைப்புக் காட்டியதில்லை. இம்முறை தமிழீழத்திற்காகப் போராடுவதுபோன்று இத்தரமுயர்த்தலுக்காக போராடுகிறார்கள்.

ஒரு பிரதேச செயலகத் தரமுயர்த்தலுக்காக அடுத்த மாவட்டத்தில் இருந்து பாதயாத்திரை ஆரம்பிக்கப்போகிறார்கள்.

உனக்கு அருகருகேயுள்ள இரண்டு ஊர்களில் ஒற்றுமையில்லை. கேவலம். என்ன சமூகம் நீ!

அவன் புரிந்துகொண்டான், இந்தக் கையாலாகத தலைமைத்துவங்கள் இருக்கும்போதே உன்னை அடிமைப் படுத்திவிடவேண்டுமென்று.

பேசத்தெரியாத, பதில் கொடுக்கத் தெரியாத பிரதிநிதித்துவங்கள் இருக்கும்போதே சாதித்துக் கொள்ளவேண்டும்; என்று தீர்மானித்து விட்டான்.

உன் கோழைத் தலைவன் கண்விழிக்க மாட்டானா?

உன் தொடை நடுங்கித் தலைவன் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாவிட்டால் ஏன் இந்த அரசில் இருக்கிறாய் என கேட்கமாட்டாயா?

எண்ணவேண்டாம். இப்போராட்டம் கல்முனையுடன் மட்டுப்படுத்தப்படப் போகிறதென்று.

கல்முனை மாநகரை அவன் அதிகாரத்தின்கீழ் கொண்டுவந்து உனக்கு அடிமை விலங்கிட்டால் அது ஆரம்பம் மட்டுமே!

அதன் முடிவு.......?

ஒ முஸ்லிமே!
அன்று “ என் சமூகம் தூங்கிக்கிக் கொண்டிருக்கின்றது; நான் விழித்துக்கொண்டிருக்கின்றேன்” என்றார் காயிமே மில்லத்.

அதைத்தான் மறைந்த உன் தலைவனும் செய்தான். அந்தத்தலைவன் நிரந்தரமாய் தூங்கச் சென்றுவிட்டான்!

நீ இன்னும் தூக்கத்திலிருந்து விழிக்காமல் இருக்கிறாயே!

விழித்தெழு!
வீரத்துடன் எழு!
உன் தலைவன் என்பவனிடம் கேள்!
சாதிக்க முடியுமா? முடியாதா? என்று.

முடியாதெனில், மானம், ரோசம், சூடு, சுரணை உன் தலைவனுக்கு இருந்தால் அரசை விட்டு வெளியேறச் சொல்.

அதன் பின் அரசே இல்லை; புரிந்துகொள்.

தங்கத்தட்டில் உன் பிரச்சினைக்குரிய தீர்வுகளை ஏந்திக்கொண்டு வருவான் எதிர்க்கட்சி உன் காலடிகளுக்கு. சாதித்துக்கொள்.

நீ இப்பொழுது சாதிக்கத் தவறினால் வேதனைகள் உனக்கு நியாயமே!
நியாயமே!

ஓ! முஸ்லிமே!
நானும் உன்னில் ஓர் அங்கம்
அதனால் தாங்கமுடியவில்லை.

எழுந்திடு!!!
ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? Reviewed by Madawala News on April 17, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.