இன்று ஜும்மாவுக்கு செல்வதில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறு அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு பிரிவின் எச்சரிக்கை சென்றுள்ளது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை அடுத்து நேற்றைய தினம் அவ்லியா பள்ளிவாயல்களுக்கும் தாக்குதல் நடக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இன்று முஸ்லிம்களின் விஷேட நாள் என்பதால் இன்றைய தினம் பொது மக்கள் அனைவரினதும் பாதுகாப்பு தொடர்பில் கருத்தில் கொண்டு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர இன்றைய தினம் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் என அரசியல் தலைவர்கள் வெளியே செல்வதை முடியுமான வரை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இன்று ஜும்மாவுக்கு செல்வதில் இருந்து தவிர்ந்து கொள்ள அரசியல் தலைவர்களுக்கு எச்சரிக்கை சென்றது..
Reviewed by Madawala News
on
April 26, 2019
Rating: