கடந்த அரசாங்க காலத்தில் தவ்ஹீத் ஜமாத்திற்கு நாம் நிதி வழங்கியதாக குற்றச்சாட்டு முன்வைப்பது எந்த அடிப்படை உண்மையும் இல்லை ..

அன்று பொதுபல சேனாவை நான் உறுவாக்கியதாக கூறியவர்கள் இன்று தவ்ஹீத் ஜமாத்தும்
என்னுடையது என கூறுவது வேடிக்கையானது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

தவ்ஹீத் ஜமாத்திற்கு கடந்த அரசாங்கத்தில் பணம் வழங்கி அவர்களை தங்கள் தேவைக்கு பயன்படுத்தியதாக அஸாத் சாலி போன்றவர்கள் குற்றம் சுமத்தியுள்ளமை தொடர்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில்  அவரிடம் கேட்கப்பட்ட போது பதில் அளித்த அவர் மேற்கண்டவாறு குறுப்பிட்டார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் 90 வீதமான முஸ்லிம்கள் தங்களுக்கு வாக்களிக்கவில்லை என சுட்டிக்காட்டிய அவர் தாங்கள் முஸ்லிம் அமைப்புகளுக்கு பணம் வழங்கி இருந்தால் முஸ்லிம்கள் ஏன் அதிகமாக வாக்களிக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

அடிப்படை உண்மையற்ற விடயங்கள் தொடர்பில் பதில் அளிப்பதில் பயனில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த அரசாங்க காலத்தில் தவ்ஹீத் ஜமாத்திற்கு நாம் நிதி வழங்கியதாக குற்றச்சாட்டு முன்வைப்பது எந்த அடிப்படை உண்மையும் இல்லை .. கடந்த அரசாங்க காலத்தில் தவ்ஹீத் ஜமாத்திற்கு நாம் நிதி வழங்கியதாக குற்றச்சாட்டு முன்வைப்பது எந்த அடிப்படை உண்மையும் இல்லை .. Reviewed by Madawala News on April 29, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.