குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 தற்கொலை குண்டுதாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். 8 பேரை அடையாளம் கண்டுள்ளோம்.
தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது தற்பொழுது
359ஆக உயர்வடைந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதில் வெளிநாட்டு பிரஜைகள் 38 பேர் உள்ளடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 தற்கொலை குண்டுதாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 8 பேர் யார் என அடையாளம் கண்டுள்ளதாகவும் , இதுவரை 60 பேரை (இலங்கையர்கள் )கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 தற்கொலை குண்டுதாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். 8 பேரை அடையாளம் கண்டுள்ளோம்.
Reviewed by Madawala News
on
April 24, 2019
Rating: