குண்டு வெடிப்புகளில் பலியானவர்களின் தொகை 70 க்கும் அதிகம்.. விமான நிலைய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இன்று காலை கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் ஏற்பட்ட வெடிப்புச்
சம்பவங்களையடுத்து, கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, குண்டு வெடிப்புக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயிரிழந்துள்ளதுடன் அதில் வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் 280 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து பலர், களுபோவில வைத்தியசாலைக்கு உடனடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
குண்டு வெடிப்புகளில் பலியானவர்களின் தொகை 70 க்கும் அதிகம்.. விமான நிலைய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
Reviewed by Madawala News
on
April 21, 2019
Rating: