வீட்டினுள் நுழைந்து 24 லட்சம் ரூபாய் பணமும் தங்கமும் கொள்ளையிட்டவார் கைது.


செவனகல – எக்கமுத்துகம பிரதேசத்தில் வீடொன்றில் நுழைந்து 24 லட்சம் ரூபாய் பணமும்
தங்க ஆபரணங்களையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு குறித்த நபர் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், உள்நுழைந்து இந்த கொள்ளையை மேற்கொண்டுள்ளார்.

பின்னர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய கொள்ளையிடப்பட்ட தொகையில் 21 லட்சம் ரூபாய் பணத்தையும், மூன்று லட்சத்திற்கும் அதிக பெறுமதி கொண்ட தங்க நகைகளும் காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் எம்பிலிபிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வீட்டினுள் நுழைந்து 24 லட்சம் ரூபாய் பணமும் தங்கமும் கொள்ளையிட்டவார் கைது. வீட்டினுள் நுழைந்து 24 லட்சம் ரூபாய் பணமும் தங்கமும் கொள்ளையிட்டவார் கைது. Reviewed by Madawala News on April 12, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.