ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கிடையில்
இன்று (21) இடம்பெற்ற பேச்சுவாரத்தை வெற்றியளித்துள்ளதாக, சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இவ்விரு கட்சிகளுக்குமிடையிலான 2 ஆம் கட்டப் பேச்சுவார்த்தை, கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (21) முற்பகல் இடம்பெற்றது.
இந்த தீர்மானமிக்க பேச்சுவார்த்தையில், புதிய கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பான 20 காரணிகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், மூன்றாம் கட்டப் பேச்சுவார்தைக்காக, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி, இவ்விரு கட்சிகளும் கூட தீர்மானித்துள்ளன.
சுதந்திரக் கட்சி - பொதுஜன பெரமுன பேச்சுவாரத்தை வெற்றி.
Reviewed by Madawala News
on
March 21, 2019
Rating: