குடும்பத் தகராறில் மூன்று மாத சிசுவை தந்தையே தரையில் அடித்த சம்பவம்
அப்பிரதேசத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தந்தையை பிரதேசவாசிகள் இணைந்து மரமொன்றில் கட்டி வைத்து காவற்துறையில் ஒப்படைத்துள்ளனர்.
நொச்சியாகம - கடுபத்வெவ - கபரகொயா வெவ பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் சந்தேகநபரான கணவர் மனைவியை தடியொன்றால் தாக்கியுள்ள நிலையில் , இதன்போது மனைவியின் கையில் இருந்த குழந்தையும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் , குழந்தையை குறித்த சந்தேகநபர் தரையில் அடித்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த குழந்தை நொச்சியாகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுர போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குழந்தைக்கு நேற்றைய தினம் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிவில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய குறித்த சந்தேகநபர் இன்றைய தினம் தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் படவுள்ளார்.
இக்கோர சம்பவம் தொடர்பில் சிங்கள ஊடகங்களில் தொகுக்கபட்ட வீடியோக்கள்.
1 : https://youtu.be/IRvcMI_Ctvo
(வீடியோ இணைப்பு) மனைவியுடனான பிரச்சினையில், மூன்று மாத குழந்தையை தரையில் அடித்த தந்தை.
Reviewed by Madawala News
on
March 19, 2019
Rating: