ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணிக்கவிருந்த வீதியில் வாழைமரக் கன்றுகளை நட்டிய
இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன் தினம் விஜயபாபுரா பிரதேசத்திலிருந்து அரலகங்வில பிரதேசத்திற்கு ஜனாதிபதி பயணிக்கவிருந்த பாதையில் குறித்த இளைஞன் நான்கு வாழைமரங்களை நட்டியுள்ளார்.
குறித்த வீதி பழுதடைந்த நிலையில் கவனிப்பாரற்று இந்தமையை ஜனாதிபதிக்கு உணர்த்தும் வகையிலேயே இவ்வாறு வாழைமரங்களை நட்டியதாக கைது செய்யப்பட்ட சரத் ரத்நாயக்க என்ற இளைஞர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
பின்னர் மன்னம்பிட்டிய நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட குறித்த இளைஞரை எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதிவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். D C
ஜனாதிபதி செல்ல இருந்த வீதியில் வாழைமரக் கன்றுகளை நட்டிய இளைஞர் கைது. 2 வாரங்களுக்கு விளக்கமறியல்.
Reviewed by Madawala News
on
March 23, 2019
Rating: