வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தில் பதிலுரை நிகழ்த்திய
நிதி அமைச்சர் மங்கள சமரவீர, ரூபாவின் பெறுமானம் கடந்த இரு மாதங்களில் இரண்டு தசம் ஐந்து சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அரச ஊழியர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரம் மீண்டும் வழங்கப்படவிருக்கிறது.
மே மாதம் முதலாம் திகதியில் இருந்து அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கை அமுலுக்கு வரும் எனவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரச ஊழியர்களின் சம்பளத்தை கடந்த மூன்று ஆண்டுகளில் அரசாங்கம் 108 சதவீதத்தால் அதிகரித்திருக்கிறது என்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார்.
ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது : மங்கள
Reviewed by Madawala News
on
March 13, 2019
Rating: