ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களை முற்று முழுதாக அழித்து விட்டோம் : சற்றுமுன் சிரிய நாட்டு இராணுவம் அறிவித்தது.
ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களை முற்று முழுதாக அழித்து விட்டோம் : சற்றுமுன் சிரிய நாட்டு இராணுவம்
அறிவித்துள்ளது. ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் என அறியப்படும் அனைவரையும் 100% அழித்து விட்டதாக இராணுவம் தெரிவிக்கின்றது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் சிரியாவை முழுவதுமாக தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாப்பு படையினர் மீட்டு விட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிரியாவின் எந்த ஒரு பகுதியும் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் வசம் இல்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளதுடன் ,
இது குறித்து டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள டிரம்ப்,
ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர் மற்ற எல்லோரையும் விட இணையத்தை சிறப்பாகப் பயன்படுத்த தெரிந்து வைத்திருந்ததாகவும், இப்போது அவர்கள் எல்லா இடங்களிலும் அடிவாங்கிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் தோல்வியைத் தழுவி மூச்சுவிடவே சிரமப்படுவதாகவும் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ஊடக செயலாளர் சாரா சாண்டர்ஸ், 2014ம் ஆண்டில் சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை சுட்டிக் காட்டி தற்போது எந்த நிலமும் அதன் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் விவரித்தார்.
ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களை முற்று முழுதாக அழித்து விட்டோம் : சற்றுமுன் சிரிய நாட்டு இராணுவம் அறிவித்தது.
Reviewed by Madawala News
on
March 23, 2019
Rating: