(VIDEO) கல்முனை முஸ்லிம்களின் ஓர் அங்குல நிலம் கூட எங்களுக்கு வேண்டாம் ! ஹரீஸ் இனவாதத்தையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்த முயற்சிக்கிறார்.
2.இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் இனவாதத்தையும்
பிரச்சினைகளையும் ஏற்படுத்தவே முயற்சிக்கிறார்.
3.சாய்ந்தமருதுக்கு அரசியல் அதிகாரம் வழங்கினால் தனக்கு பாதிப்பாகி விடும் என இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் நினைக்கிறார்.
கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவதன் மூலம் எல்லைகள் விஸ்தரிக்கப்பட்டு முஸ்லிம்களின் பாரம்பரிய பிரதேசங்கள் தமிழர் பிரதேசங்களுக்கு உள்ளீர்க்கப்படும். இதனால் கல்முனையில் முஸ்லிம்களின் பெரும்பான்மை பலம் இல்லாமல் செய்யப்படும்.
இந்த விவகாரத்தினால் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்ற விடயமும் கிடப்பில் போடப்படலாம்.
சாய்ந்தமருது பிரதேசத்துக்கான உள்ளுராட்சி சபையை, இப்போது நினைத்தால் ஒரே இரவில் வழங்க முடியும். ஆனால் அது தாமதப்படுத்தப்படுவது முஸ்லிம் தேசியம் சார்ந்த பிரச்சினைக்காகவே என்பதை சாய்ந்தமருது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்’
ஆகிய ஆமற் கூறியமூன்று விடங்கள் தொடர்பில் அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ கோடீஸ்வரன் எம்.பி அவர்களை நான் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் தெரிவித்தனவற்றை அவரது அனுமதியில் குரல்வழிப் பதிவிடுகிறேன்.
- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
(VIDEO) கல்முனை முஸ்லிம்களின் ஓர் அங்குல நிலம் கூட எங்களுக்கு வேண்டாம் ! ஹரீஸ் இனவாதத்தையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்த முயற்சிக்கிறார்.
Reviewed by Madawala News
on
March 12, 2019
Rating: