இளம் ஊடகவியலாளர் ஹஸ்பர் ஏ ஹலீம் சமூகப் பணி துறையில் இளமானிப் பட்டத்தை பூர்த்தி செய்துள்ளார்.
ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சின் கீழ் ராஜகிரியவில் இயங்கும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் நான்கு வருட சமூகப் பணி இளமானி பட்டத்தை பூர்த்தி செய்துள்ளதுடன் இன்றைய (22) தினம் கொழும்பு சர்வதேச பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற பட்டமளிப்பின் போது சமூகப் பணி இளமானிக்கான பட்டத்தை அமைச்சர் தயாகமகே அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
இளம் ஊடகவியலாளரான இவர் திருகோணமலை கிண்ணியாவை வசிப்பிடமாகக் கொண்டவரும் அப்துல் அசன் அப்துல் ஹலீம், ஜெயினுதீன் ஜரீனா உம்மா ஆகியோர்களின் சிரேஷ்ட புதல்வருமாவார்.
இளம் ஊடகவியலாளர் ஹஸ்பர் ஏ ஹலீம் சமூகப் பணி துறையில் இளமானிப் பட்டத்தை பூர்த்தி செய்தார்.
Reviewed by Madawala News
on
March 23, 2019
Rating: