கடந்த செப்டம்பர் 17ம் திகதி வர்தமானியால் வெளியிடப்பட்ட 265ஆம் இலக்க சட்டமூலமான
பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தினை வாபஸ் பெறுமாறு கோரி ஏறாவூரில் கையளுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சட்டமூலம் சிறுபான்மை இனத்துக்கு எதிராகவும் சமூக மட்டத்தில் இயங்கும் பொது அமைப்புக்களுக்கும் பாதகமாகவும் பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.
குறிப்பாக முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய பிரச்சினைகளை தோற்றுவிக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு இக்கையழுத்து வேட்டை இடம்பெற்று வருகின்றது.
ஏறாவூர் வாசிப்பு வட்ட இளைஞர்கள் குழாம் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராக ஏறாவூரில் கையெழுத்து வேட்டை!
Reviewed by Madawala News
on
March 21, 2019
Rating: