புத்தளம் அருவக்காலு குப்பை விவகாரம் ; செக் வைத்தார் சம்பிக



கொழும்பு கழிவுகளை அருவக்காலுவில்  கொட்ட அனுமதி மறுக்கப்பட்டால்
எதிர்வரும் ஏப்ரல் 20’முதல்  கெரவல பிடியவில் கழிவுகளை ஏற்க அனுமதியளிக்க மாட்டாது என விடயதான அமைச்சர் சம்பிக ரனவக குறிப்பிட்டுள்ளார்.

அருவக்காலு கழிவகற்றல் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் நிலையில் அங்கு கழிவு கொட்டுவதை அனுமதிக்கவில்லை என்றால்  கொழும்பு மாநகர சபையின் கழிவுகளை தற்போது ஏற்றுக்கொள்ளும்  கெரவலபிடிய கழிவகற்றல் தொகுதியில் அவற்றை ஏற்க  அனுமதி அளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு கழிவுகள் தற்போது மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள கெரவலபிடிய பகுதியில் கழிவகற்றல் தொகுதியில் கொட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கொடுப்பனவு பிரச்சினை காரணமாக கொழும்பு மாநகர சபை கழிவுகளை மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சின் கெரவலபிடிய கழிவகற்றும் தொகுதியில்  ஒரு வாரம் ஏற்க மறுத்தமையினால் கடும் நெருக்கடி ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் அருவக்காலு குப்பை விவகாரம் ; செக் வைத்தார் சம்பிக புத்தளம் அருவக்காலு குப்பை விவகாரம் ; செக் வைத்தார் சம்பிக Reviewed by Madawala News on March 24, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.