முன் அறிவிப்பு இல்லாமல் மின்சாரத்தை தடை செய்வதால் பொதுமக்கள் பாரிய நெருக்கடிக்கு
உள்ளாகியுள்ளனர் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் அனைத்து துறைகளிலும் தங்களது இயலாமையை காட்டி வருவதாக குறிப்பிட்ட அவர் நாட்டில் இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வரட்சி ஏற்பட்டதாகவும் அப்போது உள்ள அரசு அதனை சரியான முறையில் முகாமைத்துவம் செய்ததாகவும் குறிப்பிட்டார்.
இந்த அரசின் இயலாமை காரணமாக இந்த மின் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர் முன் அறிப்பு ஏதும் இன்றி மின் தடை செய்யப்படுவதாக வர்த்தக நிறுவனங்கள் தொழிற் சாலைகள் பாரிய இழப்பை சந்தித்து வருவதாக அவர் கூறினார்.
முன் அறிவிப்பு இல்லாமல் மின்சாரத்தை தடை செய்வதால் பொதுமக்கள் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்..
Reviewed by Madawala News
on
March 22, 2019
Rating: