ஐ.நா. கூட்டத்தொடரும் முஸ்லிம்கள் மீதான உரிமை மீறல்களும் !



இலங்கை முஸ்லிம்கள் உள்ளுக்குள் அழுதுகொண்டிருக்கின்ற சமூதாயமாகவே இருக்கின்றனர்.
அல்லது அவ்வாற பழக்கப்படுத்தப்பட்டிருக்கின்றனர். ஏதாவது ஒரு பிரச்சினை வந்தால சோடாப் போத்தலில் இருந்து வெளிவரும் ‘அமுக்கவாயுவை’ போல பெரும் வாதப் பிரதிவாதங்களை நடாத்தி வீராப்பு பேச்சுக்களை பேசி விட்டு இச் சமூகம் அடங்கி விடுவதைக் காண முடிகின்றது.

தமது மனக் கிடக்கைகளை வெளியில் சொல்லி அதற்கான பரிகாரங்களைத் தேடாமல் மௌனராகம் இசைத்து விட்டு கடைசியில் தூக்கம் கலைத்த குழந்தை மாதிர ‘எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை’ என்று புலம்புகின்ற சமூகமாக முஸ்லிம்களாகிய நம்மை பெருந்தேசியமும் முஸ்லிம் அரசியலும் பதப்படுத்தி வைத்திருக்கின்றது.

முஸ்லிம்களுக்கு பன்னெடுங்காலாமாக தீர்க்கப்படாத எத்தனையோ பிரச்சினைகளும் குறுங்கால விவகாரங்கள் பலவும் இருக்கின்றன. இது தவிர 1915 இனக் கலவரம் முதல் 90கள் தொட்டு இன்று வரை முஸ்லிம்கள் மீது நடந்தேறியஇ நடந்தேறிக் கொண்டிருக்கின்றன உரிமை மீறல்களின் பட்டியலும் மிக நீளமானது.

ஆனால்இ எந்த விவகாரமும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கே முஸ்லிம் அரசியல்வாதிகளிடையேயும் சமூகத்தின் மத்தியிலும் பேசு பொருளாக இருக்கின்றது.

பிறகு இன்னுமொரு பிரச்சினை வந்தால் அதன்பக்கம் தாவி விடுவார்கள். இன்னும் சில நாட்களுக்கு அதுவே பேசுபொருளாக இருக்கும். மீண்டும் சில காலத்தின் பின்னர் ஒரு சில விடயங்கள் குறிப்பிட்ட பருவ (சீசன்) காலங்களின் பேசப்படுதோடு தற்காலிகமாக மறக்கடிக்கப்பட்டு விடும்.

பாலஸ்தீன முஸ்லிம்கள் போல இலங்கைத் தமிழர்கள் போல ஒரு கொள்கையில் பற்றுறுதியுடன் இருந்து தொடர்ச்சியாக போராட முன்வராத சமூகமாக முஸ்லிம்களும்இ காசாவில் கவச வாகனத்திற்கு முன்னால் நெஞ்சை நிமிர்த்தி நின்றுகொண்டு பேசுகின்ற சிறார்களின் தைரியம் கூட இல்லாத ஆட்களாக இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளும் இருக்கின்ற காரணத்தினால முஸ்லிம்களின் கதை இப்படிப் போகின்றது.

கடந்தகால குறிப்பு

இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 10இ 11இ 12 ஆம் சரத்துக்கள் மனித உரிமைகள் பற்றியும் சம உரிமைகள் பற்றியும் குறிப்பிடுகின்றன. அதேபோன்று ஐ.சி.சி.பி.ஆர். எனப்படும் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சாசனம் உள்ளடங்கலாக ஏகப்பட்ட சர்வதேச சட்டங்களும் ஐ.நா. பிரகடனங்களும் உரிமைகள் பற்றி அக்குவேறு ஆணிவேறாக விபரித்திருக்கின்றன.

இலங்கையில் முஸ்லிம்கள் ஓரளவுக்கு நிம்மதியாக வாழ்கின்ற போதிலும் கூட மேற்குறிப்பிட்ட சட்ட நியதிகளின் அடிப்படையில் முஸ்லிம்களின் உரிமைகள் பல தடவைகள் மீறப்பட்டுள்ளதை வரலாற்று அனுபவங்களினூடு காண முடியும்.

ஆனால் அதற்கான பரிகாரங்களை அரசாங்கத்திடம் இருந்து முஸ்லிம் அரசியல்வாதிகள் பெற்றுத் தரவில்லை. சர்வதேசத்திடமிருந்து தீர்வு கிடைக்குமா என்பது ஒருபுறமிருக்கஇ குறைந்தபட்சம் இவ்வாறான விவகாரங்களை ஆவணப்படுத்தவும் இல்லைஇ உலகின் கண்முன்னே முஸ்லிம்களுக்கும் யுத்த காலத்திலும் அதற்கு முன் பின்னரும் உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்பதை எடுத்துச் சொல்லவும் இல்லை.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத் தொடர் தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வருகின்றது. இலங்கையில் தமிழ் தவிர்ந்த பிறமொழி ஊடகங்கள் இதை அடக்கி வாசித்தாலும்இ அரசாங்கம் இந்நிகழ்வை அலட்டிக் கொள்ளாததுபோல் தோற்றம் காட்டினாலும நிதர்சனம் அதுவல்ல.

மாறாகஇ உலகின் ஒவ்வொரு மூலையிலும் வாழம் மனித உரிமை ரீதியாக வஞ்சிக்கப்பட்ட மக்கள் மாத்திரமல்லாமல் சர்வதேச நாடுகளும் இந்தக் கூட்டத் தொடரை இமைகொட்டாமல் அவதானித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் சர்வதேசம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றது என்பதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் மிகக் கரிசனையுடன் இருக்கின்றனர்.

ஆனால் முஸ்லிம் அரசியல் கட்சிகளோ தலைமைகளோ தளபதிகளோ வழக்கம் போல இம்முறையும் கண்டு கொள்ளவில்லை. குறைந்தபட்சம் இது வரை காலமும் முஸ்லிம்கள் சந்தித்துள்ள இழப்புக்கள்இ மனித உரிமை மீறல்கள்இ அதற்கான பரிகார முன்மொழிவுகள் மற்றும் அவர்களது எதிர்பார்ப்புக்களை உள்ளடக்கிய ஒரு அறிக்கையை ஐ.நா.வுக்கு சமர்ப்பிக்காவிட்டாலும் பரவாயில்லைஇ அவ்வாறான ஒரு தொகுப்பு மேற்சொன்ன யாரிடமும் முறையாக இல்லை என்றே கூற வேண்டும்.

புழுதி படிந்த சில பைல்களுக்குள்ளும் அங்குமிங்குமாக இச்சமூகத்தின் இழப்புகள் சரியாக ஆவணமாக்கப்படாமல் சிதறிக் கிடக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நேரடியாக வந்து கேட்டாலும்இ ஒட்டுமொத்த விபரங்களும் அடங்கிய ஆவணங்கள்இ சாட்சியங்கள் நம்மிடமில்லை என்றே கைவிரிக்க வேண்டியுள்ளது.

இயக்கங்களின் கைவரிசை

இலங்கையில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றது என்பது உண்மையா பொய்யா என்பதை ஒருபுறம் வைத்துவிட்டு பார்த்தாலும் சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில் அதிகம் இழப்புக்களையும் உரிமை மீறல்களையும் சந்தித்தவர்கள் தமிழர்கள்தாம். இதற்கு உள்நாட்டில் தீர்வு கிட்டாது என்ற முடிவுக்கு வந்த பிறகே தமிழர்கள் தமது முறைப்பாடுகளை ஜெனீவாவுக்கு கொண்டு சென்றிருக்கின்றார்கள். இதற்கு நியாயம் தீர்க்குமாறு சர்வதேசத்தை வேண்டி நிற்கின்றார்கள்.

அதேபோல் இலங்கையில் மனித உரிமை மீறல்களால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் சகோதர தமிழர்கள் என்றெடுத்துக் கொண்டாலும் முஸ்லிம்களும் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை குறிப்பிட்டாக வேண்டும். போர்க் கால நடவடிக்கைகளும் அதற்கு முன்பின்னான கலவரங்கள் மற்றும் இனவாத ஒடுக்குமுறைகளும் இலங்கை முஸ்லிம்கள் மீது பெருவாரியான உரிமை மீறல்களை பிரயோகித்திருக்கின்றன என்பதை யாரும் மறுக்கவியலாது.

முஸ்லிம்கள் தரப்பைச் சேர்ந்த ஒரு சில ஊர்ச்சண்டியர்கள் பொறுப்பற்றவர்களால் ஏனைய சமூகத்தவருக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதேனும் உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் மறுதரப்பில் கூறப்படுவதுண்டு. அவற்றை நியாயப்படுத்த முடியாது. ஆனால் அதைவிடப் பன்மடங்கு உரிமை மீறல்களை முஸ்லிம்கள் சந்தித்திருக்கின்றார்கள்.

யுத்தகால மீறல்கள்

குறிப்பாக யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் மற்றும் ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்களால் முஸ்லிம்கள் பல உரிமை மீறல்களுக்கு ஆட்பட்டனர். அதேபோன்று 1915 சிங்கள – முஸ்லிம் கலவரம்இ சுதந்திரத்திற்குப் பின்னரான ஊவா வெல்லஸ்ஸ கலவரம் உள்ளிட்ட சிறு கலவரங்கள் கடந்த சில வருடங்களுக்குள் நடந்தேறிய அளுத்கம பேருவளை ஜின்தோட்டை அம்பாறை மற்றும் திகண கலவரங்களால் முஸ்லிம்கள் பெரும் அழிவுகளையும் உரிமை மீறல்களையும் எதிர்கொண்டனர்.

அரச படைகளாலும் ஒட்டுக் குழுக்களாலும் சிற்சில இழப்புக்கள் ஏற்பட்டமை நினைவு கொள்ளத்தக்கது.
ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகளின் போராட்டம் என்பது அறிக்கை விடுவதோடு முடிவடைந்து விடுவதுபோல. முஸ்லிம்களின் மனித உரிமைகளுக்கான போராட்டம் என்பது தேனீர் கடைகளில் அமர்ந்து அப்படி நடந்தது இப்படிச் செய்தார்கள் என்று கதை பேசுவதோடும்இ விடுதலைப் புலிகளையும் பாதுகாப்பு படையினரையும் விமர்சிப்பதோடு மட்டுப்படுத்தப்பட்டு விடுவதை காண முடிகின்றது.

முஸ்லிம்கள் தமது பக்கத்தில் இழைக்கப்பட்ட தவறுகளை ஏற்றுக் கொள்ளல் பகைமறத்தலுக்கு அவசியமாகும். மறுபுறத்தில்இ தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைஇ உரிமை மீறல்களை வெளிப்படையாக பேசவும்இ ஆவணப்படுத்தவும்இ முன்வைக்கவும் வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். படையினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வாறு சிங்கள மக்கள் பொறுப்பில்லையோ அதுபோலவே தமிழ் ஆயுதக் குழுக்கள் முஸ்லிம்களின் உரிமைகளை மீறியமைக்கு அப்பாவி தமிழ்ச் சகோதரர்கள் பொறுப்பாளிகளல்லர்.

எனவே மனித உரிமைகளை சர்வதேசத்தின் கண்ணுக்கு கொண்டு சென்றவர்கள் என்ற அடிப்படையில் தமிழர்களுக்கு நியாயமான பலன் கிடைக்க வேண்டும் என்பதைப் போலஇ முஸ்லிம்களின் சிங்களவர்களின் உரிமை மீறல்களும் அதற்கடுத்தாக கவனத்திற் கொள்ளப்பட வேணடியவை என்ற யதார்த்தத்தை தமிழ் மக்களும் அரசியல்வாதிகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

விடுதலை வேட்கை

தமிழர்களின் உரிமைப் போராட்ட வடிவம் பிற்காலத்தில் திசைமாறியதாக தோன்றினாலும் ஆரம்பத்தில் அது ஒட்டுமொத்த சிறுபான்மை இனங்களுக்குமான ஒரு விடுதலை தாகமாகவே முன்வைக்கப்பட்டது. அதன்காரணமாகவே அக்காலத்தில் வடக்குஇ கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழர் அரசியலோடு மிக நெருக்கமாக சேர்ந்தியங்கினர். சமகாலத்தில் தனியீழ வேட்கைக்கு பல முஸ்லிம் போராளிகள் தமது உயிர்களை அர்ப்பணித்தனர்.

சுமார் 40 மாவீரர்கள் விடுதலைப் புலிகளால் மட்டும் பிரகடனப்படுத்தப்படுமளவுக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு இருந்தது. அத்துடன்இ தப்பித்து வரும் புலிப் போராளிகளையும் அவர்களது குடும்பங்களையும் தமது வீட்டுக்குள் பூட்டி வைத்து சாப்பாடு போட்ட எத்தனையோ முஸ்லிம் குடும்பங்கள் இன்னும் சாட்சியாக இருக்கின்றனர். எத்தனை போராளிகளை தமது சொந்தப் பிள்ளை எனக் கூறிஇ இராணுவத்தினரிடம் இருந்து காப்பாற்றிய முஸ்லிம் தாய்மார்கள் இருந்தார்கள். ஏனென்றால்இ தமிழர்களின் உணர்வையும் உறவையும் முஸ்லிம்கள் மதித்தார்கள். மதிக்கின்றார்கள்.

ஆனால் அதற்குப் பின்னர் தோற்றம் பெற்ற களச்சூழல்கள் பெருமளவுக்கு ஆயுதங்கள் மீது நம்பிக்கை கொண்;ட போரட்ட இயக்கமாக அவர்களை மாற்றிவிட்டிருந்தது. இதன் உடனடி விளைவுஇ மாற்றுக் கருத்துள்ள தமிழ் அரசியல் தலைமைகளை நோக்கி புலிகளின் துப்பாக்கிகள் திரும்பியதும்இ சகோதர இயக்கப் படுகொலைகளும் எனலாம். துப்பாக்கிகள் முன்கையெடுத்திருந்த இக்காலப் பகுதியில்இ புலிகள் மட்டுமன்றிஇஈ.என்.டி..எல்.எப்.இஈ.பி.டி.பி.இ புளொட்இஈரோஸ் என பல ஆயுத இயக்கங்கள் துப்பாக்கிளால் உரக்கப் பேச ஆரம்பித்திருந்தன என்பதைச் சொல்லாமல் விட முடியாது.

வடக்கும் கிழக்கும்

மீறல்களுள் முதன்மையானது வடக்கில் பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டமை. 1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தின் கடைசிப்பகுதியில் ஒருநாள். யாழ் குடா நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் அனைவரையும் ஐந்து சந்திப்பகுதியில் கூடுமாறும் அங்கிருந்து இரண்டு மணிநேர அவகாசத்தில் வெளியேறிச் செல்லுமாறும் விடுதலைப் புலிகள் அறிவிப்புச் செய்தனர். தங்களிடம் இருக்கின்ற பணம்இ நகை எல்லாவற்றையும் ஒப்படைத்துச் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இவ்வாறு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் புத்தளத்தை அண்டிய பிரதேசங்களிலும் வேறு பல பகுதிகளிலும் இன்னும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இதுவரை முழுமையாக மீள் குடியேற்றப்படவில்லை. இது ஐ.சி.சி.பி.ஆர். மற்றும் இலங்கை யாப்பின் படி உரிமை மீறலாகும். ஆயினும்இ ஐக்கிய நாடுகள் சபையும் மனித உரிமை அமைப்புக்களும் இதற்கெதிராக குரல் எழுப்பியதாக ஞாபகம் இல்லை. அவ்வப்போது புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் இவ்விடயத்தை ஐ.நா.வின் கவனத்திற்கு கொண்டு வந்த போதும் இலங்கை முஸ்லிம்களின் ஒருமித்த கோரிக்கையாக அது அரசிற்கும் சர்வதேசத்திற்கும் முன்வைக்கப்பட வேண்டும்.

அதற்கடுத்ததாக பள்ளிவாசல்கள் உயிர்;பறிப்புக்கள் மற்றுமொரு முக்கிய உரிமை மீறலாகும். அந்த விதத்தில் ஏறாவூர்இ காத்தான்குடி பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்தவர்கள் உயிர் பறிக்கப்பட்டனர். அக்கரைப்பற்று பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன் அம்பாறைஇ மட்டக்களப்பு மாவட்டங்களின் வேறு சில இடங்களிலும் வயல்களிலும் பொது இடங்களிலும் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

அத்துடன் அழிஞ்சிப்பொத்தானை அழிவுகள், குருக்கள்மடத்தில் ஹஜ் யாத்திரிகர்கள் உயிர்பறிக்கப்பட்டறை, ஊறுகாமம் அசம்பாவிதம்இ அக்போபுர மரணங்கள் போன்றவற்றின் இழப்புகள், மீறல்கள் என இது நீண்டு செல்கின்றது.
அத்துடன் இலங்கை, இந்திய படையினராலும் ஆங்காங்கு உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
ஆகவே தொழில் நிமித்தம் ஆயுதம் தரித்திருந்த முஸ்லிம் இளைஞர்களை பலியெடுத்தமை வேறு விவகாரம். ஆனால், தமிழராயினும் முஸ்லிமாயினும் நிராயுதபாணிகள் உயிர்பறிக்கப்படுவது கடுமையான உரிமை மீறல் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இனவாத மீறல்

அத்தோடு நிற்கவில்லை. இனவாதமும் முஸ்லிம்களின் உரிமையை கடுமையாக மீறியிருக்கின்றது. அண்மைக்காலத்தை நோக்கினால்இ அளுத்கமஇ திகண மற்றும் அம்பாறைக் கலவரங்கள் முஸ்லிம்களின் பலவிதமான உரிமைகளை ஒட்டுமொத்தமாக மீறிய சம்பவங்களாகும். இவற்றில் திகண, அம்பாறைக் கலவரங்களுக்கு பண ரீதியான இழப்புக்கள் கூட இன்னும் முழுமையாக கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில், முஸ்லிம்கள் தமது மதத்தை பின்பற்றுவதில்இ தனிமனித சுதந்திரத்தை பேணுவதில்இ ஒரு இடத்தில் வசிப்பதில் ஏற்பட்ட உரிமை மீறல்கள் மற்றும் இழப்புக்கள் முறையாக முஸ்லிம்களால் ஆவணப்படுத்தப்படுவதுடன்இ அதற்கு அரசாங்கம் பரிகாரம் தேட தாமதிக்குமானால், அதை உலகமறியும் வண்ணம் பகிரங்கப்படுத்துவதை தவிர வழியில்லை.
போர்க்காலத்தில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களை சர்வதேசம் இது பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

முஸ்லிம் தலைமைகள் இது பற்றி பேசுவதற்கு வெகுவாக அஞ்சினர். ஒரு சில பொது அமைப்புக்கள், தனிப்பட்ட உள்நாட்டு, புலம்பெயர் செயற்பாட்டாளர்களை தவிர இலங்கையில் உள்ள எந்தவொரு பிரபலமான முஸ்லிம் அரசியல் கட்சி தலைவரோஇ தளபதியோ, அமைச்சரோ இவ்வாறான மீறல்களை முழுமையாக அறிக்கையிட்டு அரசாங்கத்திற்கோ, உலகத்தின் கண்ணுக்கோ சமர்ப்பிக்கவில்லை.

இனவாத விடயத்திலும் கிட்டத்தட்ட இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது என்பதுதான் கவலைக்குரியது. எனவே ஐ.நா.வுக்கு கொண்டு செல்வதல்ல எமது நோக்கம். மாறாக இவற்றை ஆவணப்படுத்தி உலகறியச் செய்ய வேண்டும் என்பதாகும்.

அந்த வகையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் பெப்ரவரி 25ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் 22 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அத்துடன் கலாசார உரிமைஇ இனப் பாகுபாடு போன்ற பிரத்தியேக விடயங்கள் தொடர்பான குழுக் கூட்டங்களும் இடம்பெறுகின்றன. 41ஆவது கூட்டத்தொடர் ஜூன் மாதத்தில் ஆரம்பமாக திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே இங்கு சுருக்கமாகக் கூறினால்,முஸ்லிம்கள் மீதான உரிமை மீறல்களை ஆவணப்படுத்த வேண்டும் என்று சொல்வது யாரையும் குற்றம் சாட்டுவதற்கோ தமிழ், சிங்கள மக்களை நோவினைப் படுத்துவதற்கோ அல்ல. மாறாக, முஸ்லிம்களுக்கும் இத்தனை இழப்புக்கள்இ உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன என்பதை ஐ.நா. சபை போன்றவற்றை உள்ளடக்கிய சர்வதேச சமூகம் அறியும் வகையில் சொல்ல வேண்டியது நமது கடமையாகும்.
முள்ளியவாய்க்காலில் தமிழனும் அரந்தலாவையில் சிங்களவனும் காத்தான்குடியில் முஸ்லிமும் இழந்த உரிமைகளின் பரிமாணங்கள் வேறுபட்டாலும் – அவை ஒரே வகையான மனித உரிமைகள்தான்.

– ஏ.எல். நிப்றாஸ்
ஐ.நா. கூட்டத்தொடரும் முஸ்லிம்கள் மீதான உரிமை மீறல்களும் ! ஐ.நா. கூட்டத்தொடரும் முஸ்லிம்கள் மீதான உரிமை மீறல்களும் ! Reviewed by Madawala News on March 24, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.