முருதகஹமுல பள்ளித் தலைவர் முஸ்தாக் மொகமட், கெலிஓய எம்.எப்.எம். நசீர் ஆகியோருக்கு தேசாபிமானி சமூகதீபம் விருது.
மலையக கலை சலாசார சங்கம் ஒழுங்கு செய்த இரத்தினதீபம் 24 வது விருது விழாவில்
மறைந்த கலைஞர்களான காமினி பொன்சேக்கா மற்றும் வீ.வாமதேவன் ஆகியோர்களின் நினைவு தினம் நினைவு கூறப்;பட்டது.
கண்டி கெப்பட்டிப்பொல நினைவு மண்டபத்தில் இடம் பெற்ற இவ்வைபவத்தில் கண்டி மேயர் கேசர சேனாநாயக்கா பிரதம அதிதியாகவும் பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான பத்மசிரி கொடிகார விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
அதிதிகள் காமினி பொன்சேக்கா மற்றும் வீ.வாமதேவன் ஆகியோரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிப்பதையும் கெலிஓயா, எலமல்தெனியைச் சேர்ந்த எம்.எப்.எம். நசீர் மற்றும் முருதகஹமுல பள்ளித் தலைவர் முஸ்தாக் மொகமட் ஆகியோருக்கு தேசாபிமானி சமூகதீபம் என்ற விருதையும் வழங்கிய போது எடுக்கப்பட்ட படம்.
முருதகஹமுல பள்ளித் தலைவர் முஸ்தாக் மொகமட், கெலிஓய எம்.எப்.எம். நசீர் ஆகியோருக்கு தேசாபிமானி சமூகதீபம் விருது.
Reviewed by Madawala News
on
March 21, 2019
Rating: